புதன், 24 செப்டம்பர், 2008

கெளரவ வேடத்தி்ல் விஜய் நடித்த பந்தயம் திரைவிமர்சனம்




நடிப்பு: நிதின் சத்யா, சிந்து துலானி, ராதிகா, பிரகாஷ்ராஜ், மேக்னா நாயுடு, கெளரவ வேடத்தி்ல் விஜய்
இசை: விஜய் ஆண்டனி



இயக்கம்: எஸ்.ஏ.சந்திரசேகர்



தயாரிப்பு: ஷோபா சந்திரசேகர்



வெளியீடு: வி.இதேஷ் ஜபக்



உசிலம்பட்டியில் இருக்கும் சிறுவன் விஜய் ரசிகனாக யாருக்கும் அடங்காமல் அடங்காப்பிடாரியாக வளர்கிறான். விஜய் ரசிகர் பிளஸ் கல்லூரி மாணவர் நிதின் சத்யா. கல்லூரியின் கரஸ்பான்டன்ட் பிரகாஷ்ராஜின் தங்கையை காதலித்த, அவரது நண்பன் கொலை செய்யப்படுகிறார்.பிரகாஷ் ராஜை பழிவாங்க அவரது விசுவாசியாக நடித்துக் கொண்டே, அவர் தங்கை சிந்து துலானியை காதலிக்கிறார் நிதின். தங்கை நிதினை காதலிப்பது தெரியாமல் அவளை யார் காதலிக்கிறார்கள் என்று கண்டுபிடித்து தீர்த்துக்கட்டும் பொறுப்பை நிதினுக்கே வழங்குகிறார் பிரகாஷ்ராஜ்.கடைசியில் விசுவாசியும், தங்கையின் காதலனும் ஒரே ஆள்தான் என்று உண்மை தெரிய வரும்போது தனது வில்லன் ஆட்டத்தை தொடங்குகிறார் பிரகாஷ்ராஜ். அப்புறம் என்னாச்சு? என்பது கிளைமாக்ஸ்.
கவுரவ வேடத்தில் விஜய் வரும் காட்சிகளும், ரெண்டு ரீலுக்கு ஒரு குத்துப்பாட்டும் கமர்ஷியல் ஊறுகாய்.
விஜய்யை காண ஊரைவிட்டு ஓடிவரும் குட்டி ரசிகர்களுக்கு 'நல்லா படிங்க' என்று அட்வைஸ் செய்கிறார்
கெளரவ வேடத்தி்ல் வரும் விஜயின் பாத்திரம் மட்டுமே பந்தயம் படத்துக்கு மிகவும் உறுதுனையாக இருக்கிறது எனலாம், விஜய் வரும் காட்சிகளிலும் விஜய் பற்றிசொல்லு கருத்துக்களாளும் பந்தயம் நிச்சயம் ஜெயிக்கும்.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

all the Bestanna!

Unknown சொன்னது…

Thalapathiku enathu valthukal matumilai!
Panthayaithil nan winpanuvatharku!
unka panthayam Winpanavenum entru pray panukiren!

கருத்துரையிடுக

talk me