சனி, 24 ஏப்ரல், 2010

விஜயின் சிறந்த படங்களுக்கு வாக்களியுங்கள், முடிவுகள் அணைத்தும் சுறா வெளியீட்டு தினமன்று பிரமாண்ட வெளியீடாக வெளியிடப்படும், இன்னும் சில நாட்களில்!







விஜய் நடித்த திரைப்படங்களில் சிறந்தது

Vote For Best Vijay's Movies




நாளைய தீர்ப்பு: 1992
செந்தூரப்பாண்டி: 1993
ரசிகன்: 1994
தேவா: 1994
ராஜாவின் பார்வையிலே: 1995
விஷ்ணு: 1995
சந்திரலேகா: 1995
கோயம்புத்தூர் மாப்ளே: 1996
பூவே உனக்காக: 1996
வசந்த வாசல்: 1996
மாண்புமிகு மாணவன்: 1996
செல்வா: 1996
காலமெல்லாம் காத்திருப்பேன்: 1997
லவ் டுடே: 1997
ஒன்ஸ் மோர்: 1997
நேருக்கு நேர்: 1997
காதலுக்கு மரியாதை: 1997
நினைத்தேன் வந்தாய்: 1998
பிரியமுடன்:1998
நிலாவேவா:1998
துள்ளாத ம் மனமும்: 1999
என்றென்றுகாதல்: 1999
நெஞ்சினிலே: 1999
மின்சாரக் கண்ணா: 1999
கண்ணுக்குள் நிலவு: 2000
குஷி: 2000
பிரியமனவளே: 2000
பிரெண்ட்ஸ்: 2001
பத்ரி: 2001
ஷாஜகான்: 2001
தமிழன்: 2002
யூத்: 2002
பகவதி:2002
வசீகரா: 2003
புதிய கீதை: 2003
திருமலை: 2003
உதயா:2004
கில்லி: 2004
மதுரை: 2004
திருப்பாச்சி: 2005
சச்சின்: 2005
சுக்கிரன்: 2005
சிவகாசி: 2005
ஆதி: 2006
போக்கிரி: 2007
அழகிய தமிழ் மகன்: 2007
குருவி: 2008
வில்லு: 2009
வேட்டைக்காரன்: 2009







வியாழன், 22 ஏப்ரல், 2010

.

..

புதன், 7 ஏப்ரல், 2010

மிக விரைவில் உங்கள் இதய நாயகன் இளையதளபதியின் நாளையதிர்ப்பு முதல் இன்றையதீர்ப்பு வரை மேல்பார்வை



இளையதளபதி விஜயின் 50வது பிரமாண்ட தயாரிப்பில் இன்னும் சில நாட்களில் வெளிவர இருக்கின்றது, இதனை முன்னிட்டு உங்கள் அபிமானம் பெற்ற இவ் வழைப்பூவில் சுறா வெளியீட்டு தினமன்று மிக பிரமாண்டமாக விஜயின் அகரமும் சிகரமும் என்ற தலைப்பில் விஜயின் சினிமா வெற்றியும் அவரின் சினிமா வாழ்க்கையும், 50திரைப்படங்களும் பற்றிய மேல்பார்வையாக மிக விரைவில் தயாராகி வருகிறது, இந்த பதிவுக்கு ஒத்துலைக்கும்மாறு ரசிகர்பெருமக்களை இவ் வழைப்பூ வேண்டி நிற்கிறது. மேல் கானும் விஜயின் திரைப்படங்களுக்கு வாக்களியுங்கள்.

திங்கள், 5 ஏப்ரல், 2010

விஜய்யின் புதிய படம் காவல்காரன்!

விஜயின் 50வது படம் சுறாவின் பாடல்கள் சக்கை போடு போடுகிறது, இன்னும் சில நாட்களில் 50வது பிரமான்ட வெளியீடு சுறா, எதிர்பார்ப்புகள் இமய மலையை தொடுகிறது, இந்த சூறாவளிக்கு பிறகு விஜய் நடிக்க போகும் படம் காவல் காரன் .

விஜய்யின் 51 வது படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜாவா, சித்திக்கா என்ற பெரும் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. இன்று (ஏப்ரல் 5) காரைக்குடியில் தனது படப்பிடிப்பை துவங்கிவிட்டார் சித்திக்

விஜய்யின் 51 வது படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜாவா, சித்திக்கா என்ற பெரும் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. இன்று (ஏப்ரல் 5) காரைக்குடியில் தனது படப்பிடிப்பை துவங்கிவிட்டார் சித்திக். விஜய் நடிக்கும் இந்த படத்தின் பெயர் காவல் காரன்.

பணக்கார அசினுக்கு பாடிகார்டாக வேலைக்கு சேருகிற விஜய், எப்படி அசினை கவர்கிறார் என்பதுதான் கதை. ஆனால் படத்தில் வேறொரு பெண்ணை கைப்பிடிப்பாராம் விஜய். அந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் பிறப்பதாக போகிறது படம். க்ளைமாக்சில் பத்து வயது மகனுக்கு அப்பாவாகவும் நடிக்கிறாராம் விஜய்.
விஜயுடன் இனைந்து நடித்த தமிழ் படங்கள் அசினுக்கு பெரும் வெற்றியை கொடுத்தது. காவல் காரனும் மாபெரும் வெற்றியை கொடுக்க காத்திருக்கிறது அசினின் மாக்கெற்

சித்திக் தமிழில் இயக்கும் படங்களில் வடிவேலு நிச்சயம் இருப்பாரல்லவா? காவல் காரனிலும் வைகைப்புயல் உண்டு. அசினை கண்காணிக்கிற கேரக்டரில் விஜய். விஜய்யை கண்காணிக்கிற கேரக்டரில் வடிவேலு. இவர்கள் போக ஒரு மிக முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் ராஜ்கிரண். அசினின் அப்பா இவரேதானாம்!
பட தலைப்பிலே கதைகள் கட்சிதமாய் இருக்கும் என்பதையும், விஜய் மாற்று வேடங்கள் போடுவதாகவும், கதை அமைந்திருக்கிறது என்று, பிரன்ட்ஷ் படத்தை இயக்கிய மலையால இயக்குனர் சித்திக் கூறியுள்ளார்.

புதன், 31 மார்ச், 2010

பிரமான்ட அரங்கில் இளையதளபதி விஜயின் 50வது திரைப்பட இசையை பிரபல முன்னணி கலைஞர்களின் முன்னிலையில் வெளியீடு,






இளைய தளபதி விஜயின் 50வது படம் என்பதால் விஜயின்45வது படத்திலிருந்தே எதிர்பார்ப்புகள் எகிறுகின்றன, அது மட்டுமல்ல சன் டீவியின் வெளியீடு, விஜய்க்கு திருப்புமுனையை கொடுத்த காதலுக்கு மாரியாதை படத்தின் தயாரிப்பாளர் என்பதாலும் சுறா படத்தின் வெளியீட்டு நாளை எதிர் நோக்கி உள்ளது இவ் இளைஞ உலகம் எனபதில் சந்தேகம் எதுவும் இல்லை.

சுறா ஆடியோ வெளியீட்டு விழா சென்னை லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் நடந்தது.

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் - தமன்னா, ரவிகுமார், நா.முத்துகுமார், ஜெயம் ரவி, பார்த்தீபன், அமீர், விஜய் ஆன்டனி, இயக்குனர் பேரரசு, சன் குடும்பம், இயக்குனர் ராஜ் குமார், பாடகர்கள் வடிவேலுவுடன் என்று பல முன்னணி கலைஞர்கள் வடிவேலுவுடன் திரையுலக பிரமுகர்கள் இவ் விழாவில் கலந்து சிறப்பித்தார்கள்.

பாடல்களை திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது.
சன் தொலைக்காட்சிக்காக நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுறா படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. முதலில் ஏப்ரல் 14-ம் தேதி படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. இப்போது ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே முதல் வாரத்துக்கு தள்ளிப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

திங்கள், 29 மார்ச், 2010

சுறாவின் இசையால் கடல் எல்லையை தொடும் விறுவிறுப்பான பாடல்கள்.

Suraa Tamil Movie Songs - 2010
Cast: Vijay, Tamannah, Vadivelu, Sriman & Dev GillDirection: S. P. RajkumarProduction: Sangili MuruganMusic: Mani SharmaLyricis: Na.muththukumar, Rajkumar, Vasil, Kabilan

01. தஞ்சாவூர் ஜில்லாக்காரி…
பாடியவர்கள் : ஹேரசந்ரா, சைந்தவி
பாடல் : நா.முத்துக்குமார்






02. வெற்றி கொடியேற்று…
பாடியவர்கள் : ரஞ்ஜித், முகேஷ்
பாடல் : வஸில், எஸ்.எப், ராஜகுமார்





03. சிறகடிக்கும் நிலவு…
பாடியவர்கள் : கார்த்திக், ரீதா
பாடல் : சினேகன்




04. வங்கக் கடல் எல்லை…
பாடியவர்கள் : நவீன், மாலதி லக்கிரிநாத்
பாடல் : கபிலன்




05. தமிழன் வீரத்தமிழன்…
பாடியவர்கள் : ராகுல் நம்பியார்
பாடல் : கபிலன்





06. நாம் நடந்தால் அதிரடி…
பாடியவர்கள் : நவீன், ஷோபா சந்திரசேகர், ஜனனி நாதன்
பாடல் : கபிலன்





Download - sura full song
DOWNLOAD LINK

நானும் உங்களில் ஒருத்தன், இப்போது 25 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறேன்.






அகில சூப்பர் ஷ்டார், நற்பணி நாயகன், இளையதளபதி விஜயின் நற்பணியின் தொடர்ச்சியாக இன்று திருச்சி மாவட்ட தலைமை இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கத்தின் கவுரவ தலைவர் பி.எஸ்.வீரா திருமணம் நேற்று திருச்சியில் தாஜ் திருமண ஹாலில் நடந்தது. நடிகர் விஜய் தலைமை தாங்கி வீரா திருமணத்தை நடத்தி வைத்தார்.

அதே மேடையில் 24 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தையும் நடத்தி வைத்தார். மணமக்கள் விஜய் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்டனர்.

அப்போது அவர், கட்டில், பீரோ, பாத்திரங்கள் உள்பட 51 பொருட்களை திருமண சீர்வரிசை பொருட்களாக வழங்கினார். மணமக்கள் ஒவ்வொரு ஜோடியாக விஜய் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

பின்னர், திருமண விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:

ஒரு படத்தில் நடித்து முடிக்க 6 மாதம் ஆகிறது. 6 மாதம் கஷ்டப்பட்டு நடிக்கிறோம். இந்த நிலையில் இது போன்று ரசிகர்களை சந்திக்கும் போது தான் எனக்கு உற்சாக டானிக் கிடைக்கிறது.

நானும் உங்களில் ஒருத்தன். உங்கள் குடும்ப பிரச்சினை தீர்ப்பதில் எனக்கு பங்கு உண்டு. சிறுவயதில் என் தங்கை இறந்து விட்டார். அதுதான் என் வாழ்க்கையில் பெரிய இழப்பு. அவள் இன்று இருந்திருந்தால் உங்கள் வயதுதான் இருக்கும். ஆனால் இப்போது 25 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறேன். இதை நான் மறக்க மாட்டேன்.

வலையில் சிக்க புறா இல்லை… நான் சுறா!

சுறா படத்தில் நான் பேசும் வசனத்தில், அமைதியாக போவதற்கு நான் ஒன்று புதிய ஆள் அல்ல. உன் வலையில் விழுவதற்கு புறா அல்ல. நான் சுறா என்பேன். நான் யார் வலையிலும் சிக்க மாட்டேன். தனித்து என் பயணத்தைத் தொடர்வேன். என்றும் உங்களில் ஒருவனாக இருப்பேன் என்றார்..

சுறா படத்திலிருந்து அவரை ஒரு பாடல் பாடச் சொல்லி வற்புறுத்தினர் ரசிகர்கள். அதற்கு அவர், “சுறா படப் பாடல்கள் இனிமேல்தான் வெளியாக உள்ளன. எனவே நான் இப்போது அதைப் பாடக் கூடாது. உங்களுக்காக வேட்டைக்காரன் பாடலைப் பாடுகிறேன்” என்று கூறியவர், “என்னுச்சி மண்டைல சுர்ருங்குது…” பாடலைப் பாடிக் காட்டினார்.