செவ்வாய், 28 அக்டோபர், 2008

Vijay in Final Of Manada Mayilada

Asin’s No to Vijay

Vijay is currently busy with Prabhu Deva’s Villu which will be wrapped up soon. After this his next project would be Vettaikaran for A V M films to be directed by Babu Sivan, a former associate of Dharani. Heroine hunt is on for this film and many leading names have been considered from Ileana to Asin. It was earlier speculated that Asin said
yes to the offer. Close sources revealed that 45 days of her call sheet was required for which a sum of 2 crore was offered.

புதன், 22 அக்டோபர், 2008

எல்லா வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்! விஜய்.



சென்னை பிரசாத் ஸ்டூடியோ. விஜய் நடிக்கும் "வில்லு' படத்திற்காக பிரமிக்க வைக்கும் வகையில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த அரங்கத்தில் நயன்தாராவுடன் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நடனம் ஆடிவிட்டு கேரவனுக்கு வந்தார் விஜய். பார்ப்பதற்கு ஒரு கல்லூரி மாணவரைப் போல் இருக்கிறார். வில்லு அவர் நடிக்கும் 48-வது படம்.
"வில்லு' பற்றி?
""நானும், பிரபுதேவாவும் இணைந்த "போக்கிரி' பெரிய வெற்றியைப் பெற்றதால் எங்களது காம்பினேஷனில் உருவாகும் இப்படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் "வில்லு' யூனிட் கடுமையாக உழைத்து வருகிறது. என்னோட மற்ற படங்களில் இல்லாத அளவிற்கு இதில் நிறைய வெளிநாட்டு லொக்கேஷன்கள் இடம் பெறுகிறது. கலர்ஃபுல்லான கதை. அதை கலர் ஃபுல்லாகவும், பவர்ஃபுல்லாகவும் எடுத்து வருகிறார் இயக்குனர் பிரபுதேவா. படம் பொங்கல் விருந்தாக வரும். அதனால் இப்போதைக்கு படத்தைப் பற்றி அவ்வளவு பில்டப் பண்ண வேண்டாம் என்றிருக்கிறோம்.
"சிவகாசி'யில் ஒரு பாடலுக்கு உங்களுடன் ஆடிய நயன்தாரா இந்தப் படத்தில் உங்களுக்கு ஜோடி, அவரைப் பற்றி?
நடிப்பு, டான்ஸ் என எல்லாவற்றிலும் அசத்தி வருகிறார். சும்மா பாடல்களுக்காக மட்டும் வருகிற ஹீரோயினாக இல்லாமல், நல்ல கேரக்டர்களில் நடிக்கவும் செய்கிறார். என்னோட சேர்ந்து காமெடியும் பண்ணி இருக்கிறார்.
விஜய் என்றாலே ஜாலி ஃபார்முலா கதைகளில்தான் நடிப்பார் என்று ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. இது தொடருமா?
கண்டிப்பாக தொடரும். ரசிகர்கள் இதைத்தான் என்னிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு நல்ல பாடல்கள், நிறைய காமெடி, ஆக்ஷன் காட்சிகள் ஆகியவைதான் திருப்தியைத் தருகிறது. நான் கமர்ஷியல் சினிமாவுக்கு பொருத்தமானவன் என்று நினைக்கிறார்கள். அது உண்மையும்கூட! சில ஆண்டுகளுக்கு முன்பு மென்மையான பாத்திரங்களில் நடித்தேன். "திருமலை', "கில்லி', "திருப்பாச்சி' ஆகிய படங்களின் தொடர் வெற்றிகள் காரணமாக தொடர்ந்து ஆக்ஷன் கதைகளே என்னைத் தேடி வருகிறது.
நடிகர்கள் அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் காலம் இது. உங்களுக்கும் அரசியலில் ஆர்வம் இருக்கிறதா?
மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் சமூக அக்கறையும், பிறருக்கு உதவும் நல்லெண்ணமும் அவசியம் இருக்க வேண்டும். சமூகப் பொறுப்பு உள்ளவர்கள் சினிமா துறையிலிருந்து மட்டுமல்ல, வேறு எந்தத் துறையிலிருந்தும் அரசியலுக்கு வரலாம். நான் என்னோட ரசிகர் மன்றத்திற்கு கொடியை அறிமுகப்படுத்தியது அரசியலுக்காக அல்ல. என் ரசிகர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவும், ஒரு அடையாளத்திற்காகவும்தான். இது அரசியலில் நுழைய நான் எடுத்துக்கொள்ளும் முயற்சி அல்ல. சமூக சேவைகளை செய்வதற்கான அடுத்த ஸ்டெப், அவ்வளவுதான்!
மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லையா?
அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கிறது. அதற்கான ஸ்கிரிப்ட்டும் நேரமும் ஒத்துவரும்போது கண்டிப்பாக நடிப்பேன். நான் அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
கதைகளைப் பொறுத்து இறுதி முடிவு எடுப்பது நீங்கள்தானா?
கண்டிப்பாக இறுதி முடிவு எடுப்பது நான்தான். என் அம்மாவும், மனைவியும் தொழில் சம்பந்தமான என் முடிவுகளில் தலையிட மாட்டார்கள். என் தந்தை என் சினிமா வாழ்க்கையில் மட்டுமல்ல, என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறார். சின்ன விஷயமானாலும்கூட அவரிடம் ஆலோசனை கேட்டுதான் செய்வேன். ஆனால் கடைசி முடிவு என்னுடையதாக இருக்கும். என் மனைவி சங்கீதா நான் நடிக்கும் படங்களை நன்றாக விமர்சனம் செய்வார். அது சரியாகவும் இருக்கும். இப்போது காஸ்ட்யூம் விஷயத்திலும் நான் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறேன் என்றால் அதற்கு காரணமும் என் மனைவிதான்.
உங்கள் குழந்தைகள் பற்றி...?
என் மகன் சஞ்சய் நன்றாகப் படிக்கிறான். அவன் நிறைய படங்களைப் பார்க்கிறான். அவனுக்கு மிகவும் பிடித்த ஹீரோ நான்தான் என்று நினைக்கிறேன். இப்போது அவனுக்குப் பிடித்த பாடல், "நாக்க முக்க...' (சிரிக்கிறார்). ரெண்டாவது குழந்தை சுட்டியா இருக்கும்னு சொல்வாங்க. அதுக்கு அப்படியே பொருத்தமா செம குறும்பான தேவதையா இருக்கா என் மகள் திவ்யா. அவளுக்கு இப்போ இரண்டரை வயதாகிறது.
திரையுலகைப் பொறுத்தவரையில் உங்களுக்கு கடும் போட்டியாளராக யாரைக் கருதுகிறீர்கள்?
எல்லோரையும்தான். சினிமாவில் நுழைபவர்கள் அத்தனை பேருமே பெரிய ஆளாக வரவேண்டும் என்று நினைத்துதான் கடுமையாக உழைக்கிறார்கள். ஒவ்வொருவரையும் கவனித்து வருகிறேன். ஒவ்வொருவரிடமும் தனித் திறமைகள் இருக்கிறது. ஒவ்வொரு புதிய வரவையும் நான் போட்டியாளராகவே கருதுகிறேன். அப்போதுதான் இன்னும் கடினமாக உழைக்க முடியும்.
என்றாவது ஒரு நாள் நீங்களும் இயக்குனர் ஆவீர்கள்தானே?
இப்போதைய என் மன நிலையில் அதெல்லாம் செட் ஆகாது.
இந்த தீபாவளி திருநாளில் வாசகர்களுக்கான உங்கள் அறிவுரை என்ன?
கடினமாக உழையுங்கள். எந்த ஒரு வேலையை செய்தாலும் நூறு சதவீதம் நம்பிக்கையுடன் செய்யுங்கள். வெற்றி நிச்சயம். எல்லா வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
thanks

விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசினுக்கு ரூ.2 கோடி?


தமிழ் சினிமா சரித்திரத்தில் இதுவே ஒரு நடிகை வாங்கும் அதிகப்படியான சம்பளம் என்று கூறப்பட்டது. இதனை விரைவில் முறியட்க்கப் போகிறார் அசின் என்கின்றன செய்திகள்.
விஜய்யின் 49-வது படமான 'வேட்டைக்காரனை' ஏவி.எம் தயாரிக்கிறது. தரணியின் உதவியாளர் பாபு சிவன் படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் அசினை எப்படியும் நடிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய். பாலிவுட் படங்களில் பிஸியாக இருக்கும் அசினும் வேட்டைக்காரனில் நடிக்க ஆர்வமாக உள்ளார். தற்போது 'லண்டன் ட்ரீம்ஸ்' படத்துக்காக லண்டனில் இருக்கும் அசின், படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை வந்து பாபு சிவனிடம் கதை கேட்கிறார்.

விஜய் தற்போது நடித்து வரும் 'வில்லு' பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. 'வில்லு' திரைக்கு வரும் முன்பே 'வேட்டைக்காரன்' படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். பிப்ரவரியிலிருந்து இந்திப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால்தான் இந்த அவசரம்.
இது ஒரு புறம் இருக்க அசினுக்கு வேட்டைக்காரனுக்காக இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நிஜமானால் அதிக சம்பளம் வாங்கும் நடிகை பட்டியலில் நயன்தாரா பின்னுக்கு தள்ளப்படுவார்.

வியாழன், 16 அக்டோபர், 2008

Virulent Vijay and Hilarious Vadivelu in Bangkok!! gallery

Villu and co flew to Bangkok last week for shooting some vital scenes. Vadivelu is the man behind comedy in Villu and more interesting news is that he is very busy delivering a wide range of hilarious performance for comedy ingredient of the movie. His comedy in Seval releasing on Deepavali is certain to be a grand success.

New Villu stills from Kumudam
மீண்டும் ஒரு கில்லியடிப்பார்!
தளபதிக்கு 50 வது படம் வரப்போகிறது. இந்த படங்களை யார் இயக்குவது? யார் தயாரிப்பது? என்ற கேள்விகள் இரு தரப்பு ரசிகர்களையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய்க்கு கில்லி என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஏ.எம்.ரத்னமும் 50 வது பட க்யூவில் நிற்கிறாராம்.
தற்போதைய நிலைமை அவ்வளவாக சரியில்லாத ஏ.எம்.ரத்னம், பீமாவுக்கு பின் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். பட்ஜெட்டில் துண்டு விழுகிற மாதிரி படங்களை தயாரித்தவர்கள் மத்தியில் பட்ஜெட்டில் குண்டு விழுகிற மாதிரி படங்களை தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம். இவரது பிரமாண்டத்தை மிஞ்சுகிற வண்ணம் கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட இன்னும் படங்களை தயாரிக்கவில்லை. அப்படிப்பட்டவர், மீண்டும் விஜயை சந்தித்து கால்ஷீட் கேட்டாராம்.
‘நிச்சயம் ஒரு படத்தில் மீண்டும் இணைவோம்’ என்ற வாக்குறுதியை மட்டும் இப்போதைக்கு கொடுத்திருக்கும் விஜய், நல்ல இயக்குனரோடு வாருங்கள் என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறாராம். விஜய்க்கு பொருத்தமாக ஒரு கதையை கேட்டு வருகிறார் ரத்னம். அது அமைந்தால், மீண்டும் ஒரு கில்லியடிப்பார்! ஒருவேளை அது விஜயின் 50 வது படமாக கூட இருக்கலாம்.

செவ்வாய், 14 அக்டோபர், 2008

Kuruvi 150 Days Function

click here for more function video online
http://www.tubetamil.com/view_video.php?viewkey=f1e25eced5d26c301f68






வியாழன், 9 அக்டோபர், 2008

விஜய் நாளைய சூப்பர் ஸ்டார்: கே. பாலசந்தர்

Photo Gallery விஜய் வருங்கால சூப்பர் ஸ்டார் என்று இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் புகழாரம் சூட்டினார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து தரணி டைரக்ஷனில் விஜய் நடித்த `குருவி' படம் 150 நாட்கள் ஓடியது. இதையொட்டி, அந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. இந்த விழாவுக்குத் தலைமை தாங்கிய பாலசந்தர் விஜயின் ஸ்டார் அந்தஸ்தைப் பாராட்டிப் பேசினார்.
விஜய் பல பரிமாணங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறார். அவர் ஒரு எதிர்கால சூப்பர் ஸ்டார் என்று நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். தனிமனித ஒழுக்கம், அனைத்து நண்பர்களையும் ஒரே மாதிரியாக பார்க்கும் நல்ல குணம் ஆகிய நற்பண்புகள்தான் விஜய் உயர்வுக்குக் காரணம். அவருக்கு ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது” என்றார் கே.பி.
முன்னதாக, பட அதிபர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையுமë வரவேற்றுப் பேசினார். விழா முடிவில் நடிகர் விஜய் நன்றி கூறினார். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம நாராயணன், தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி, விவேக், நடிகை த்ரிஷா, டைரக்டர் தரணி, இசையமைப்பாளர் வித்யாசாகர் ஆகியோரும் பேசினார்கள்.
`குருவி' படத்தின் மூலம் கிடைத்த லாபத் தொகையில் இருந்து உடல் ஊனமுற்றோர், முதியோர், அனாதைகள், மன வளர்ச்சி குன்றியோர் இல்லங்கள் உள்ளிட்ட 6 சமூக சேவை மையங்களுக்கும், மகாலட்சுமி என்ற இதய நோயாளிக்கும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தலா ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். இந்தத் தொகையை அவருடைய தாயார் துர்கா ஸ்டாலின், சம்பந்தப்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

Ritz Magazine-King of Kollywood

செவ்வாய், 7 அக்டோபர், 2008

``குருவி, வியாபார ரீதியில் மிகப்பெரிய வெற்றி படம்'' `தேவி' தியேட்டர் அதிபர் சொல்கிறார்

இந்த வருடம் திரைக்கு வந்த தமிழ் படங்களில், வியாபார ரீதியில் மிகப்பெரிய வெற்றி படம், குருவி. இந்த பெருமை முழுவதும் அந்த படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினையே சேரும்'' என்கிறார், `தேவி' தியேட்டர் அதிபரும், நிர்வாக இயக்குனருமான வரதராஜன்.
இவர், மேலும் கூறுகிறார்:-
``குருவி, உதயநிதிக்கு முதல் படம். ஆனால் அனுபவப்பட்ட தயாரிப்பாளர் போல் படத்துடன் அதிக ஈடுபாடு வைத்திருந்தார். படப்பிடிப்புக்கு தினமும் வந்துவிடுவார். அங்கு வேலை எப்படி நடக்கிறது? என்று பார்வையிடுவார். அதனால்தான் அவர் ஒரு சிறந்த பட தயாரிப்பாளராக வெற்றி பெற்று இருக்கிறார். சொன்ன தேதியில் படத்தை `ரிலீஸ்' செய்தும் விட்டார்.
நல்ல அனுபவஸ்தர்களை உடன் வைத்துக்கொண்டு, படத்தை விளம்பரம் செய்வதிலும் கலக்கி விட்டார்.
எங்கள் தியேட்டரில் விஜய் நடித்த `கில்லி,' 208 நாட்கள் ஓடியது. போக்கிரி 187 நாட்களும், சிவகாசி 115 நாட்களும் ஓடின. `குருவி' 150 நாட்கள் ஓடியிருக்கிறது. மற்ற விஜய் படங்கள் எல்லாம் நகரில் 4 அல்லது 5 தியேட்டர்களில்தான் `ரிலீஸ்' ஆகும். ஆனால், `குருவி' 10 தியேட்டர்களில் `ரிலீஸ்' செய்யப்பட்டு இருந்தது.
ஒரு படம் 10 தியேட்டர்களில் திரையிடப்பட்டு, 150 நாட்கள் ஓடியது, இதுதான் முதல்முறை. தமிழ்நாடு முழுவதும் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் `குருவி' லாபம் சம்பாதித்து கொடுத்து இருக்கிறது.
பட தயாரிப்பு நிறுவனத்துக்கு பெயர் கிடைக்க வேண்டும்... வினியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் பணம் சம்பாதிக்க வேண்டும்...என்ற நோக்கத்தில், ஒரு நல்ல படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து படம் தயாரிக்க வேண்டும்.'' இவ்வாறு வரதராஜன் கூறினார்.




சக்சஸ் தயாரிப்பாளர்களின் லிஸ்டில் தன்னையும் ஒருவராக சேர்த்துக்கொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்


சக்சஸ் தயாரிப்பாளர்களின் லிஸ்டில் தன்னையும் ஒருவராக சேர்த்துக்கொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இவரது ரெட்ஜெயண்ட் மூவிஸின் முதல் தயாரிப்பான 'குருவி' 150 நாட்களை தொட்டுவிட்டது.
இதற்கான வெற்றிவிழா சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் நடந்தது. தாத்தா முதல்வர், அமைச்சர் அப்பா என்ற பெரிய பின்னணி இருந்தும், அந்த ஆர்ப்பாட்டங்களின்றி விழாவை நடத்தினார் உதயநிதி. ஆதரவற்றோர், ஊனமுற்றோர்களுக்கு பல லட்சங்கள் நிதியுதவி அளித்து வெற்றி விழாவை அர்த்தமுள்ளதாக்கினார்.
இயக்குனர் பாலசந்தர், தயாரிப்பாளர்கள் சங்க்த தலைவர் இராம.நாராயணன் முக்கிய விருந்தினர்களாக கலந்துகொண்டு படத்தின் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக்கலைஞர்களுக்கு வெற்றி கேடயம் வழங்கி வாழ்த்தினர்.
விழா தொடங்கி அரைமணி நேரம் தாமதமாக வந்த த்ரிஷா, "ஐதராபாத்திலிருந்து வந்தேன், அதான் லேட். ஸாரி" என்றபடி மேடையில் அமர்ந்தார். வாழ்த்துரை வழங்கிய பாலச்தரின் பேச்சு விநியோகஸ்தர்கள் மத்தியில் பாஸ்பரஸாய் பற்றியது.





அவரது பேச்சு வருமாறு :-





"நான் இந்தப் படத்தை திருட்டு வி.சி.டியில்தான் பார்த்தேன். அப்போது எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. என் படத்தையும் இப்படி திருட்டு வி.சி.டி.யில் பார்த்தால் என்னாவது? என்ற கேள்விதான், அந்த பயததிற்கு காரணம்.
திருட்டு வி.சி.டிக்காரர்களை ஓடிப்பிடிக்கும் வம்புகளை தவிர்த்துவிட்டு, படம் வெளிவந்து மூன்று மாதத்திற்கு பிறகு டி.வி.டி.க்கள் வெளியிடும் உரிமையை விற்கலாம்.
பாலசந்தர் இவ்வாறு பேசியபோது அரங்கில் இருந்த விநியோகஸ்தர்களில் சிலர், "படத்தை காசுகொடுத்து வாங்கும் விநியோகஸ்தர்களின் நிலையை கொஞ்சம்கூட யோசிக்காமல் பேசுறாரே இவர்" என முணுமுணுக்கத் தொடங்க, அந்த இடத்தில் சின்ன சலசலப்பு ஏற்பட்டது.

விஜய்,அஜீத் - "50:50" படங்கள

தமிழ் திரையுலகின் இரு பெரும் இளைய தலைமுறை நடிகர்களான விஜய்யும், அஜீத்தும், தங்களது ஐம்பதாவது படத்தை நோக்கி வேகமாக போய்க் கொண்டுள்ளனர்.
இன்னும் 2 படங்களில் இருவரும் அரை சதம் போடவுள்ளனர். அஜீத் தற்போது நடித்து வரும் ஏகன் அவருக்கு 48வது படமாகும். அதேபோல விஜய் தற்போது நடித்து வரும் வில்லு அவருக்கு 48வது படமாகும். ஏகனை ராஜு சுந்தரம் இயக்குகிறார். வில்லுவை அவரது தம்பி பிரபுதேவா இயக்குகிறார் என்பது ஆச்சரியமான ஒரு பொருத்தமாகும்.
அஜீத் தனது 49வது படமாக சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் படத்தில் நடிக்கவுள்ளார். 50வது படத்தை யாருக்கு இயக்கக் கொடுப்பது என்பதை இதுவரை அவர் முடிவு செய்யவில்லையாம். இந்தப் படம் பிரமாண்டமாக இருக்கும் என்று அஜீத் தரப்பு உற்சாகமாக கூறுகிறது.
அதேபோல விஜய் தனது 49வது படமாக நடிக்கவிருப்பது வேட்டைக்காரன். விஜய்யும் 50வது படத்திற்கான இயக்குநரை இன்னும் முடிவு செய்யவில்லையாம்.
இப்படி இரு பெரும் இளைய தலமுறை சூப்பர் ஸ்டார்களும் தங்களது 50வது படங்களை நெருங்குவதையொட்டி இருவரின் ரசிகர்களும் அதை உற்சாகமாக கொண்டாட காத்திருக்கின்றனர்.

ஞாயிறு, 5 அக்டோபர், 2008

vikatan and kumutham


Kuruvi 150th Day Celebrations - Images


வெள்ளி, 3 அக்டோபர், 2008

Vijay’s memorable Gandhi Jayanthi




The 140th Gandhi Jayanthi celebration at the Raj Bhavan was a memorable event with His Excellency Governor Surjit Singh Barnala inaugurating the paintings of the Chennai-based painter A.P. Sreedhar. There were 18 paintings in all and each one of it had an apt title. The paintings exhibited released Gandhiji's conviction,
defiance, affection, determination and perseverance among others. Speaking at the event, the Governor recalled his interactions with Mahatma Gandhi.All the paintings had a commentary to it which makes the exhibition even more interesting. Noted actor Vijay, along his father and director S.A.Chandrasekar visited that exhibition and was in awe with Sreedhar's work.