திங்கள், 22 பிப்ரவரி, 2010

"அஜீத் ஒரு திறந்த புத்தகம்" விஜய்

அஜீத் விவகாரத்தில் அவருக்காக சினிமா உலகில் பரிந்து பேசிய ஒரே நட்சத்திரம் சூப்பர் ஸ்டார்தான்.ஆனால் அவருக்கும் பெப்ஸி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் கண்டனம் தெரிவித்துவிட, இன்னொரு நட்சத்திரம் யாரும் எதிர்பாராத வகையில் இதில் தலையிட்டுள்ளார். அவர் விஜய். தொழில் ரீதியாக அஜீத்துக்கு எதிரானவராக விஜய் சித்தரிக்கப்பட்டாலும் திரைக்கு வெளியே இருவரும் நட்பு பாராட்டிக் கொள்வது தொடர்கிறது.கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை இரு குடும்பத்தினரும் சேர்ந்தே கொண்டாடுகின்றனர். அந்த பாசத்தில், விசி குகநாதனைத் தொடர்பு கொண்ட விஜய், "அஜீத் ஒரு திறந்த புத்தகம் மாதிரி. அவர் மனதில் ஒன்றுமில்லை. நினைப்பதை உடனே கொட்டிவிடுவார். அதைப் பெரிதுபடுத்தி அவருக்கு மன உளைச்சல் தரவேண்டாம்..." என்று கேட்டுக் கொண்டாராம்.

சனி, 20 பிப்ரவரி, 2010

"நாளைய தீர்ப்பு முதல், இன்றைய தீர்ப்பு" வரை இளையதளபதி விஜயின் அந்தமும், அகரமும், சினிமா வரலாறு இவ் வழைப்பூவில் மிக விரைவில்.


இளையதளபதி என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும்,டாக்டர், விஜய் அவர்கள் 1992ம் ஆண்டு நாளையதீர்ப்பு என்ற திரைப்படம் மூலமாக இளைய நாயகனாக அறிமுகமாகி இன்று அவர் கடந்து வந்த பாதைகள், வடுக்கள், இதுவரை 49 படங்கள் சினிமாவுக்குள் நுழைந்து நாயகனாக 18 வருடங்களைதொட்டு 50வது படமாகிய சூறாவளியாக « சுறா »வில் தொடரும் விஜய்.
அவரது 50வது திரைப்படமாகிய சுற வெள்ளித்திரையில் சித்திரைக்கு வெளி வருகிறது ஆகவே இதனை முன்னிட்டு உங்கள் அபிமானம் பெற்ற இவ் வழைப்பூவில் "அந்தமும் தொட்டு அகரமும் வரையிலான விஜயின் சினிமா வரலாறு"களும், கடந்து வந்த பதைகளும், தொடர்ந்து சினிமா நட்சத்திரமாக திகளும் விஜய் பற்றிய மேல் பார்வையிலான மாபெரும் பெட்டகம் ஒன்று "சுறா" திரைப்படத்தின் வெளியீட்டு தினம் அன்று உங்கள் அபிமானம் பெற்ற இவ் வழைப்பூவில் வெளியிட தயாராகிறது.
ஆகவே விஜய் அவர்களை வாழ்த்த விரும்பும் ரசிகர்பெருமக்கள், உங்களின் வாழ்த்துக்கள், அவர் இதுவரை நடித்த திரைப்படங்களில் பிடித்த , பிடிக்காத விமர்சனங்கள், கவிதைகள், அவரின் நற்பண்புகள், உங்களுக்கு அவரிடம் கவர்ந்தது, விமர்சனங்கள், கவர்ந்த திரைப்படம், அவர் தொடரும் பாதைகள் பற்றிய விமர்சனங்கள், அனைத்தும் வரவேற்க்கப்படும். நீங்கள் superstarvijayfanz@gmail.com இவ் மின்னஞ்சல் முகவரிக்கு « சுற » வெளியீட்டு தினத்திற்க்கு முன்பாக அனுப்பி வைக்கவும், அத்துடன் உங்களின் பெயரையும் குறிப்பிடவும்.

அவர் இது வரை நடித்து வெளி வந்த சிறந்த, பிடித்த திரைப்படங்களுக்கு மேலே தரப்பட்ட poll மூலமாக வாக்களித்து உங்களின் பங்களிப்பை வழங்கவும்.

நன்றி

"நாளைய தீர்ப்பு முதல், இன்றைய தீர்ப்பு" வரை இளையதளபதி விஜயின் அந்தமும், அகரமும், சினிமா வரலாறு இவ் வழைப்பூவில் மிக விரைவில்.


இளையதளபதி என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும்,
டாக்டர், விஜய் அவர்கள் 1992ம் ஆண்டு நாளையதீர்ப்பு என்ற திரைப்படம் மூலமாக இளைய நாயகனாக அறிமுகமாகி இன்று அவர் கடந்து வந்த பாதைகள், வடுக்கள், இதுவரை 49 படங்கள் சினிமாவுக்குள் நுழைந்து நாயகனாக 18 வருடங்களைதொட்டு 50வது படமாகிய சூறாவளியாக « சுறா »வில் தொடரும் விஜய்.


அவரது 50வது திரைப்படமாகிய சுற வெள்ளித்திரையில் சித்திரைக்கு வெளி வருகிறது ஆகவே இதனை முன்னிட்டு உங்கள் அபிமானம் பெற்ற இவ் வழைப்பூவில் "அந்தமும் தொட்டு அகரமும் வரையிலான விஜயின் சினிமா வரலாறு"களும், கடந்து வந்த பதைகளும், தொடர்ந்து சினிமா நட்சத்திரமாக திகளும் விஜய் பற்றிய மேல் பார்வையிலான மாபெரும் பெட்டகம் ஒன்று "சுறா" திரைப்படத்தின் வெளியீட்டு தினம் அன்று உங்கள் அபிமானம் பெற்ற இவ் வழைப்பூவில் வெளியிட தயாராகிறது.

ஆகவே விஜய் அவர்களை வாழ்த்த விரும்பும் ரசிகர்பெருமக்கள், உங்களின் வாழ்த்துக்கள், அவர் இதுவரை நடித்த திரைப்படங்களில் பிடித்த , பிடிக்காத விமர்சனங்கள், கவிதைகள், அவரின் நற்பண்புகள், உங்களுக்கு அவரிடம் கவர்ந்தது, விமர்சனங்கள், கவர்ந்த திரைப்படம், அவர் தொடரும் பாதைகள் பற்றிய விமர்சனங்கள், அனைத்தும் வரவேற்க்கப்படும். நீங்கள் superstarvijayfanz@gmail.com இவ் மின்னஞ்சல் முகவரிக்கு « சுற » வெளியீட்டு தினத்திற்க்கு முன்பாக அனுப்பி வைக்கவும், அத்துடன் உங்களின் பெயரையும் குறிப்பிடவும்.

அவர் இது வரை நடித்து வெளி வந்த சிறந்த, பிடித்த திரைப்படங்களுக்கு மேலே தரப்பட்ட poll மூலமாக வாக்களித்து உங்களின் பங்களிப்பை வழங்கவும்.

நன்றி

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

2009ம் ஆண்டு சிறந்த தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கான சூப்பர் ஷ்டார் கலை விருதுகள்.

இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்.

''கருவறை தொடங்கி, கல்லறை வரையும் காதல்'', உலகெங்கும் காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் சூப்பர் ஷ்டார் விஜய் இணையத்தளம் சார்பாக இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்.

2009ம் ஆண்டு சிறந்த தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கான http://www.superstarvijay.blogspot.com/ வழங்கும் சூப்பர் ஷ்டார் கலை விருதுகள்.








பிடித்த நடிகர்கள்:
இந்த முடிவுகள் முழுக்க முழுக்க ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படை முடிவுகள்.
வாக்குகளின் அடிப்படையில் பிடித்த நடிகர்களின் வரிசையில் முதல் மூன்று இடத்தை விஜய், அஜித் மற்றும் சூர்யாவுக்கு கிடைத்துள்ளது.

பிடித்த நடிகைகள்:
இந்த முடிவுகள் முழுக்க முழுக்க ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படை முடிவுகள்.
வாக்குகளின் அடிப்படையில் பிடித்த நடிகைகளின் வரிசையில் முதல் மூன்று இடத்தை பிடித்த நடிகர்கைகள் அசின், தமனா மற்றும் திரிஷா கிடைத்துள்ளது, அவர்களுக்கு கிடைத்துள்ளது.

இந்த ஆண்டும் (2009) கோலிவுட் அதிகமான படங்களை தயாரித்திருக்கிறது. ஆயிரங்களில், லட்சங்களில் தொடங்கிய சினிமா இப்போது கோடிகளில் கொழுத்து கொண்டிருக்கிறது. தொழில் நுட்பத்தில் - கோடிகளில் வளர்ந்த அளவுக்கு சினிமா மாறுபட்ட கதை விஷயத்தில் இன்னமும் தேக்க நிலையிலேயே இருக்கிறது.இந்த ஆண்டு நேரடியாக தயாரிக்கப் பட்ட தமிழ் படங்கள் 124 என்கிறது எண்ணிக்கை.
சுமார் 131 படங்களை பெற்று போட்டுவிட்டு, கம்பீரமாக வணக்கம் சொல்லிவிட்டது 2009.

ஆனால் டாப் இடங்களை பிடித்த படங்கள் எவை எவை என்பதை வசூல் ரீதியாக அறிந்து கொள்வதுதானே முக்கியம்? திரையுலக வியாபாரம் தொடர்பான தமிழ்நாடு என்டர்டெயின்ட்மென்ட் பத்திரிகையின் ஆசிரியர் ராமானுஜத். அவர் சொன்ன தகவல்கள் வரிசைப்படி,
பத்து கோடி வசூலை தாண்டிய படங்கள்
அயன், ஆதவன், பேராண்மை, படிக்காதவன், கந்தசாமி, நாடோடிகள், வில்லு, உன்னைப்போல் ஒருவன், வேட்டைக்காரன்.
ஐந்து கோடியில் இருந்து பத்து கோடி வரை வசூல் செய்த படங்கள்
வெண்ணிலா கபடிக்குழு, சிவா மனசில சக்தி, தோரணை, மாசிலாமணி, நினைத்தாலே இனிக்கும்.
குறிப்பிட தக்க வித்தியாசமான கதைப்படங்கள்
அயன், பேராண்மை, பசங்க, உன்னைப்போல் ஒருவன்
யாவரும் நலம், ஈரம், நாடோடிகள், ரேணிகுண்டா
நான் கடவுள், திரு திரு துரு துரு , வெண்ணிலா கபடிக் குழு

மொழி மாற்று வசூல் படங்கள்
அருந்ததி, 2012 – ருத்ரம், Avatar

எதிர்பாராத ஆச்சயர்ங்கள்
ஆச்சர்யம் ஒன்று. மீடியாக்களும், (பார்த்த) மக்களும், சக திரையுலகமும் வாயார பாராட்டிய படமான பசங்க, விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் லாபம் ஈட்டித் தரவில்லை. ஆச்சர்யம் இரண்டு. விநியோகஸ்தர்கள் முதலில் வாங்க அஞ்சிய ‘வேலு பிரபாகரனின் காதல் கதை’ என்ற திரைப்படம், விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் பெருத்த லாபத்தை கொட்டி கொடுத்திருக்கிறது.
சுப்பிரமணியபுரத்தின் தொடர்ச்சியாக வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு, பசங்க இரண்டும் சென்ற வருடத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள். பசங்க சர்வதேச கவனம் பெற்று தமிழ் சினிமாவின் தரத்தை ஒருபடி மேலேற்றியது.

மொழிமாறி வந்தவையில் அருந்ததியும், அவதாரும், 2012ம் வெற்றிக்கொடி கட்டின. எக்ஸ்மென் 4 வழக்கம்போல. மொழி மாறி வந்த 36ல் மற்றவை திசை மாறியவை.
நாகேஷ், ராஜன் பி.தேவ், முரளி, ஓமகுச்சி நரசிம்மன், பாலா‌ஜி, எஸ்.வரலட்சுமி, சேதுவிநாயகம், ராம்போ ரா‌ஜ்குமார், திரைக்கதை மன்னன் லோகிததாஸ் என இழப்புகள் ஏராளம். கிடைத்ததோ இசைப் புயலின் தயவில் இரு ஆஸ்கர். பிரகாஷ்ராஜுக்கு சிறந்த நடிகர் தேசிய விருது.2009ன் ‘ஸ்டார் ஆஃப் தி இயர்,’ இயக்குனர் பன்னீர்செல்வம். அறிமுகமில்லாத பசங்களை வைத்து இவர் செய்த அதிரடி தமிழக எல்லை தாண்டி ரேனிகுண்டா வரை அதிர்கிறது. சினிமாவை எப்படி நேசிக்கணும் என்று கற்றுக் கொள்ளலாம் இவரது படம் பார்த்து. தமிழ் சினிமாவின் இளம் பசங்க நாடோடிகளின் பாதையில் ரேனிகுண்டாவை தாண்டி நடைபோட வேண்டும் என்பதே 2010ன் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.
நான் கடவுள்". படம் வெளிவரும் முன்பேயும் வெளிவந்த பின்னேயும் பல சர்ச்சைகளை சந்தித்தது. எதிர்பார்ப்பை முழுவதும் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் வழக்கமான மசாலா படங்களில் இருந்து மாறுபட்டு எடுக்கப்பட்டு இருந்தது.

இந்த ஆண்டு வருகின்ற 2010ஆம் ஆண்டு சினிமாவாவது தயாரிப்பாளர்களுக்கு வெற்றி தரும் ஆண்டாக அமையட்டும்.

2009ம் ஆண்டு சிறந்த தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கான இவ் விருதுகள் கலைஞர்களை சென்றடையாவிட்டாளும் நிச்சயம் ஒவ்வொரு கலைஞர்களின் ரசிகர்களை ஊக்கிவிக்கும் முகமாக சென்றடையவேன்டும்.
2009ம் ஆண்டு சிறந்த தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு இமயில் மூலமும் நேரடியாகவும் வாக்களித்த அனைத்து ரசிகர்பெருமக்களுக்கும், விருதுகளுக்கு ஆதரவும் அன்பும் தந்த அனைவருக்கும், மற்றும் விருதுகளை வாக்குகளின் அடிப்படையில் விமர்சக குழுக்களின் அடிப்படையிலும் தேர்வு செய்த விருது குழுவினர்களுக்கும் சூப்பர் ஷ்டார் "விஜய்" இணையத்தின் சார்பாக நன்றிகள்...

சென்ற வருட 2009 சூப்பர்ஷ்டார் வலைப்பூ வழங்கிய விருதுகளை பார்வையிட இங்கே க்ளிக் செய்யவும்.http://superstarvijay.blogspot.com/2009/08/2008.html

"சூப்பர் ஷ்டார் விஜய்" இணையத்தளம்

சனி, 13 பிப்ரவரி, 2010

நாளைய தினம், காதலர் தின சிறப்பாக சூப்பர் ஷ்டார் கலை விருதுகள் உங்கள் அபிமான வழைப்பூவில்.

உங்கள் அபிமான சூப்பர் ஷ்டார் வழைப்பூ கடந்த வருட காதலர் தின சிறப்பாக ‘’விஜயும் தமிழ் சினிமா வரலாறும்’’ என்ற தலைப்புடன் சிறிய பெட்டகம் ஒன்றை வெளியிட்டிருந்தது அதை பார்வையிட இங்கே க்ளிக் செய்யவும்.http://superstarvijay.blogspot.com/2009/03/nine-sentiment-as-vijays-vettaikaran.html

அதே போல் இவ் வருட காதலர் தின சிறப்பாக கலைவிருதுகள் உங்கள் உள்ளங்களை தொட வருகிறது.கடந்த வருடம் சூப்பர்ஷ்டார் வலைப்பூ இணையத்தளம் வழங்கும் சிறந்த தமிழ் சினிமா திரை கலைஞர்களுக்கான விருதுகள் அனைத்தும் August முதலாம் திகதி வெளியானது, ஆனால் இம்முறை புது ஆண்டு பிறந்த சூட்டோடு சூடாக திரை கலைஞர்களுக்கான விருதுகளை வெளியிட வேண்டும் என்கின்ற வேண்டுகோளுக்கும், நிபந்தனைகளுக்கும் இனங்க இவ் வருடம் காதலர் தின சிறப்பாக நாளைய தினம் வெளியாக இருக்கிறது.

சென்ற வருட சூப்பர்ஷ்டார் வலைப்பூ வழங்கிய விருதுகளை பார்வையிட இங்கே க்ளிக் செய்யவும்.http://superstarvijay.blogspot.com/2009/08/2008.html



செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

விஜயின் 51வது படம், விஜய்... ஜோடி அசின்!

சுறா படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 51 வது படத்துக்காக, மலையாளத்தில் சமீபத்தில் வெளியான பாடிகார்டு படத்தின் உரிமையை வாங்கியுள்ளார் விஜய். சுறா படம் கிட்டத்தட்ட முடிவுறும் கட்டத்துக்கு வந்துவிட்டது. எனவே தனது 51வது படம் குறித்த வேலைகளில் மும்முரமாக உள்ளார் விஜய். இந்தப் படத்தின் தயாரிப்பாளராக சிவராஜ் வெங்கடராஜூ என்பவர் தயாரிக்கிறார். இவர் வேறு யாருமல்ல, விஜய் நடிப்பில் 2000-ம் ஆண்டு வெளியான ப்ரியமானவளே படத்தைத் தயாரித்தவர். இந்தப் படத்துக்குப் பிறகு வேறு படமே தயாரிக்கவில்லை அவர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு விஜய் படம் மூலம் மறுபிரவேசமாகிறார்.பாடிகார்டு ஒரிஜினல் படத்தை இயக்கிய சித்திக் இந்தப் படத்தையும் இயக்குகிறார். தமிழில் விஜய்யின் இமேஜுக்கு ஏற்ப அந்தப் படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதி வருகிறாராம் சித்திக்.பெரிய மனிதர்களுக்கு பாடிகார்டாகப் போவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் காமெடி கலந்த சமாச்சாரங்கள்தான் இந்தப் படம். நயன்தாரா - திலீப் நடித்து மலையாளத்தில் சராசரிப் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சித்திக் ஏற்கெனவே விஜய்யை வைத்து பிரண்ட்ஸ் படம் எடுத்தவர்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர் அசின்.

புதன், 3 பிப்ரவரி, 2010

அஜீத்-விஜய் இணைந்து டான்ஸ்!

அஜீத்தும் விஜய்யும் சேர்ந்து பேசினாலே சிலிர்த்து போகிறது நாடு. சேர்ந்து ஆடினால்? அட... இது எப்போ? மேட்டரில் மேலும் கொஞ்சம் சர்க்கரையை போட்டுக் கொள்ளுங்கள் நண்பர்களே. இந்த இரண்டு பேருடன் சேர்ந்து விக்ரமும் ஆடப் போகிறாராம்!

இம்மாதம் ஆறாம் தேதி முதல்வர் கலைஞருக்கு நடக்கவிருக்கும் பாராட்டு விழாவில்தான் இந்த ஆட்டத்தை போட போகிறார்கள் மூவரும்.

முதல்வர் கலைஞர் எழுதி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் அந்த பாடலுக்குதான் இந்த மூவரும் மேடையேற போகிறார்கள். வரலாற்று சிறப்பு மிக்க இந்த பாடலில் அஜீத்-விஜய் சேர்ந்து ஆடுகிறார்கள் என்பதும் கூடுதல் அட்ராக்ஷன்தானே?

சுறாவின் அறிமுகம், சுனாமியின் சுறாவளி விஜய்

கடலில் சுனாமி வருகிறது. வானை தொடுகிற அளவுக்கு அலைகளின் சீற்றம். ஊரே அஞ்சி ஓடிக் கொண்டிருக்க அந்த அலையில் படகை ஓட்டிக் கொண்டு ஸ்டைலாக அறிமுகம் ஆவாராம் விஜய். பின்னணியில் ஹோய்...ஹோய்... என்று பில்டப் கொடுப்பது தனி மேஜிக்!
படத்தின் மையக்கருவே சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு விஜய் எப்படி தன் முயற்சியால் வீடு கட்டி தருகிறார் என்பதுதானாம். இதற்காக புதிதாக கட்டப்பட்ட சுனாமி குடியிருப்புகளில் ஷ§ட்டிங் நடத்த தீர்மானித்திருக்கிறார்களாம்.
இது விஜயின் 50வது படம் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக எடுக்கிறார்கள் சுற குழுவினர்கள்.