திங்கள், 5 ஏப்ரல், 2010

விஜய்யின் புதிய படம் காவல்காரன்!

விஜயின் 50வது படம் சுறாவின் பாடல்கள் சக்கை போடு போடுகிறது, இன்னும் சில நாட்களில் 50வது பிரமான்ட வெளியீடு சுறா, எதிர்பார்ப்புகள் இமய மலையை தொடுகிறது, இந்த சூறாவளிக்கு பிறகு விஜய் நடிக்க போகும் படம் காவல் காரன் .

விஜய்யின் 51 வது படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜாவா, சித்திக்கா என்ற பெரும் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. இன்று (ஏப்ரல் 5) காரைக்குடியில் தனது படப்பிடிப்பை துவங்கிவிட்டார் சித்திக்

விஜய்யின் 51 வது படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜாவா, சித்திக்கா என்ற பெரும் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. இன்று (ஏப்ரல் 5) காரைக்குடியில் தனது படப்பிடிப்பை துவங்கிவிட்டார் சித்திக். விஜய் நடிக்கும் இந்த படத்தின் பெயர் காவல் காரன்.

பணக்கார அசினுக்கு பாடிகார்டாக வேலைக்கு சேருகிற விஜய், எப்படி அசினை கவர்கிறார் என்பதுதான் கதை. ஆனால் படத்தில் வேறொரு பெண்ணை கைப்பிடிப்பாராம் விஜய். அந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் பிறப்பதாக போகிறது படம். க்ளைமாக்சில் பத்து வயது மகனுக்கு அப்பாவாகவும் நடிக்கிறாராம் விஜய்.
விஜயுடன் இனைந்து நடித்த தமிழ் படங்கள் அசினுக்கு பெரும் வெற்றியை கொடுத்தது. காவல் காரனும் மாபெரும் வெற்றியை கொடுக்க காத்திருக்கிறது அசினின் மாக்கெற்

சித்திக் தமிழில் இயக்கும் படங்களில் வடிவேலு நிச்சயம் இருப்பாரல்லவா? காவல் காரனிலும் வைகைப்புயல் உண்டு. அசினை கண்காணிக்கிற கேரக்டரில் விஜய். விஜய்யை கண்காணிக்கிற கேரக்டரில் வடிவேலு. இவர்கள் போக ஒரு மிக முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் ராஜ்கிரண். அசினின் அப்பா இவரேதானாம்!
பட தலைப்பிலே கதைகள் கட்சிதமாய் இருக்கும் என்பதையும், விஜய் மாற்று வேடங்கள் போடுவதாகவும், கதை அமைந்திருக்கிறது என்று, பிரன்ட்ஷ் படத்தை இயக்கிய மலையால இயக்குனர் சித்திக் கூறியுள்ளார்.

2 கருத்துகள்:

Sanjeeban சொன்னது…

I like Vijay
My Email rsanjeeban@hotmail.com
web www.sanjeeban.tk
please contact me for vijay sir

vettaikaran சொன்னது…

Sura his hit & Kavalkaran is super duper hit

கருத்துரையிடுக

talk me