








இன்றைகளின்
கவலைக்காகவா
நீநாளைகளை
நட்டப்படுத்துகிறாய்!
என்றைக்கு
நீ நீயாக இரு
இன்னொருவரின் இரவலாக இருக்காதே!
-வெற்றிப்பேரொளி.
நீ நீயாகவிருந்தால்....எதையும் எதிர்கொள்ளலாம்
எதிர்த்து நின்றே எதையும் சாதிக்கலாம்...
இன்று மட்டுமல்ல நாளைக்கும்...
பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.
பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
ஏழை எளியவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.
பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
உண்மைக்காக எதையும் துறக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.
வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
தன்னலம் சிறிதும் இல்லாமல் நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
இரக்கம் உள்ள இதயம் சிந்தனை ஆற்றல் படைத்த மூளை வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.
வீரர்களே கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தடைகளிலிருந்து விடுபடுங்கள்
இளைஞனே வலிமை அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை.
சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!
உடல் பலவீனத்தையோ மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
talk me