
வெள்ளி, 28 நவம்பர், 2008
Determined Villu crew shoots non-stop

புதன், 26 நவம்பர், 2008
செவ்வாய், 25 நவம்பர், 2008
Vijay Block!



also learnt that the actor wanted to avoid the inconvenience that could be caused to public and cut short his meeting. The fans were naturally disappointed that they could not spend more time with their star. As per the plan Vijay was to have distributed various goods to the deserving but this could not be done. It is now learnt that Vijay's PRO P.T.Selva Kumar distributed the stuff the next day on behalf of him.

ரசிகர்களின் கூட்டத்தில் நசுங்கிய விஜய்


இலவச திருமணம், இலவச உடை, இலவச அரிசி இதை தொடர்ந்து ரசிகர்களின் பெரு முயற்சியால் உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடம் ஒன்றையும் திறந்து வைத்தார் விஜய். ஓசூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தங்களது கூட்டு முயற்சியால் இந்த பள்ளியை உருவாக்கியிருக்கிறார்கள். இதை திறந்து வைக்க தனது தலைவரை விட்டால் தகுதியான ஆள் ஏது என்று நினைத்திருப்பார்கள் போலும். விஷயத்தை விஜயிடம் சொல்ல, அவரும் மகிழ்வோடு வர சம்மதித்தார்.
இவர் வருதையறிந்த ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டார்கள் ஓசூரில். சில டீன் பெண்களும், இளைஞர்களும் பெங்களூரில் இருந்து கூட விஜயை காண வந்திருந்தார்கள். ஏராளமான ரசிகர்கள் கூடியதால் அந்த இடத்தில் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கிருந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்பதை அறிந்த விஜய், விறுவிறு என்று மேடையிலிருந்து கிளம்பி விட்டார். போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏற்றப்பட்டார்.
ஞாயிறு, 23 நவம்பர், 2008
வாசகர்களின் கருத்துக்கள்
உங்கள் கருத்துக்களை வெளியிட superstarvijayfan@gmail.com

எங்கள் இளைய தளபதி விஜய் அவர்களுக்கும் இனிய ரசிகர்களுக்கும்,
வணக்கம்,
"தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்" என்பார்களே அதுபோல் எங்கள் தொப்புள் கொடி உறவுகளே நீங்கள் எங்களுக்கு குரல் கொடுத்து வருகிறீர்கள் அதனை இட்டு பெருமகிழ்ச்சியும் எம் எதிர் கால வாழ்வில் சிறு நம்பிகையும் கொள்கிறோம். தாய்க்கு மகனும் அண்ணனுக்கு தம்பியும் நன்றி சொல்வது இல்லையே! அதனால் நாங்கள் உங்களுக்கு நன்றி சொல்லப் போவது இல்லை. அனாலும் எங்கள் மட்டற்ற மகிழ்ச்சியைத் தெரிவித்து கொள்கிறோம். அதோடு எங்களுக்கான குரலை இன்னும் விரைவுபடுத்துங்கள், எங்கள் வாழ்வுரிமையையும் உலகறிய செய்யுங்கள் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம். அதன் ஒரு பகுதியாக ஈழத்தமிழர்களின் "சுய நிர்ணய உரிமையை" தமிழகச் சட்ட மன்றத்தில் அங்கீகரிக்க கோருங்கள். அது எங்கள் வாழ்வுக்கு நிரந்தர வாழ்வுரிமையைப் பெற்றுத்தரும். மறைந்த எம் "பொன் மனச் செம்மல்", "மக்கள் திலகம்" திரு M.G.R அவர்கள் ஈழதமிழர்களின் மனதில் நிலையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்.அதே போல் எம் இளைய தளபதி விஜய் அவர்களே, நீங்களும் அவர் போல் எம் மக்கள் நலன் பாராட்டி எம் மனதிலும் தமிழீழ வரலாற்றிலும் நீங்கா இடம் பெற வேண்டும் என்று அன்புடன் விரும்புகிறோம்.
"நாடு! அதை நாடு! - அதை நாடாவிட்டால் ஏது வீடு?"
நன்றி,
இப்படிக்குவழுதி பாண்டியன்
கனடாவிலிருந்து.........

இளையதளபதி விஜய் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி,
விஜயின் ரசிகனாக இருக்க இன்று நான் பெருமைப்படுகிறேன்
எமது ஈழத்தின் சொந்தங்களின் வேதனைகளை நன்றாக அறிந்து அதர்க்காக குரல் கொடுத்து உண்ணாவிரதம் இருப்பதில் பெருமைபடுகிறேன்சினிமாவையும் அப்பாற்பட்டு சமுதாயத்திற்க்கு இறங்கிவந்து தமிழர்களின் பொது நலம் காத்து,விடுதலைக்காக போராடும் ஈழத்தமிழர்க்காக விஜய் குரல் கொடுப்பதில் ஒரு ஈழத்தமிழன் என்ற வகையில் விஜயின் ரசிகனாக இருக்க இன்று நான் பெருமைப்படுகிறேன்.
இப்படிக்கு swiss லிருந்து vijayan.........
எமது ஈழத்தின் சொந்தங்களின் வேதனைகளை நன்றாக அறிந்து அதர்க்காக குரல் கொடுத்து உண்ணாவிரதம் இருப்பதில் பெருமைபடுகிறேன்சினிமாவையும் அப்பாற்பட்டு சமுதாயத்திற்க்கு இறங்கிவந்து தமிழர்களின் பொது நலம் காத்து,விடுதலைக்காக போராடும் ஈழத்தமிழர்க்காக விஜய் குரல் கொடுப்பதில் ஒரு ஈழத்தமிழன் என்ற வகையில் விஜயின் ரசிகனாக இருக்க இன்று நான் பெருமைப்படுகிறேன்.
இப்படிக்கு swiss லிருந்து vijayan.........

தளபதி விஜய் அவர்களுக்கும், சக ரசிக நெஞ்சங்களுக்கும் வணக்கம்,
Subject: இளையதளபதியின் உணர்வு இமயத்தின் உயரம்.
தங்களின் ஈழ தமிழர் மீதான பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது. பெயருக்கு வந்தோம் போனோம், வராததுக்கு விளக்கம் கொடுத்தோம் என்று திரை வாழ்வை ஓட்டும் நடிகர்கள் மத்தியில் இளையதளபதியின் உணர்வு இமயத்தின் உயரம், உலகத்தமிழினம் என்றென்றும் தளபதிக்கு கடமைபட்டுள்ளது.
இளையதளபதியின் போராட்டம், ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்க வேண்டும், சுய உரிமை போரட்டத்தை தமிழக மக்களின் வாசலுக்கு கொண்டு சென்று உணர்த்த வேண்டுமென வாழ்த்துகிறேன்.
அஞ்சா நெஞ்சுரம் கொண்ட ரசிகர்களாகிய நாம், போர் நிறுத்தம் எனும் அரசியல் மாயையை விடுத்து ஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமையை தமிழக சட்ட சபையில் அங்கீகரிக்க கோரி இப்போராட்டத்தை முன்னெடுப்போம்.
ஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரி!சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவோம்!தளபதியின் குரலுக்கு செவி கொடு!ஈழ தமிழனை வாழவிடு!
என எம் குரல் வான் தொடட்டும்!.நன்றி.
இப்படிக்கு BHUVAN.......
தங்களின் ஈழ தமிழர் மீதான பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது. பெயருக்கு வந்தோம் போனோம், வராததுக்கு விளக்கம் கொடுத்தோம் என்று திரை வாழ்வை ஓட்டும் நடிகர்கள் மத்தியில் இளையதளபதியின் உணர்வு இமயத்தின் உயரம், உலகத்தமிழினம் என்றென்றும் தளபதிக்கு கடமைபட்டுள்ளது.
இளையதளபதியின் போராட்டம், ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்க வேண்டும், சுய உரிமை போரட்டத்தை தமிழக மக்களின் வாசலுக்கு கொண்டு சென்று உணர்த்த வேண்டுமென வாழ்த்துகிறேன்.
அஞ்சா நெஞ்சுரம் கொண்ட ரசிகர்களாகிய நாம், போர் நிறுத்தம் எனும் அரசியல் மாயையை விடுத்து ஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமையை தமிழக சட்ட சபையில் அங்கீகரிக்க கோரி இப்போராட்டத்தை முன்னெடுப்போம்.
ஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரி!சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவோம்!தளபதியின் குரலுக்கு செவி கொடு!ஈழ தமிழனை வாழவிடு!
என எம் குரல் வான் தொடட்டும்!.நன்றி.
இப்படிக்கு BHUVAN.......
எங்கள் இளைய தளபதி விஜய் அவர்களுக்கும் இனிய ரசிகர்களுக்கும்,
வணக்கம்,

"நாடு! அதை நாடு! - அதை நாடாவிட்டால் ஏது வீடு?"
நன்றி,
இப்படிக்குவழுதி பாண்டியன்
கனடாவிலிருந்து.........
செவ்வாய், 18 நவம்பர், 2008
Vijay with his Fans protest for tamil SRI LANKA
16/11/2008

As announced earlier, the one-day fast organized by Vijay Fans Association to protest the killing of innocent Tamils in Sri Lanka in the ongoing civil war between the Sri Lankan government and the LTTE, was held yesterday, November 16, 2008 in Chennai and all over Tamil Nadu. The hunger fast, held in 37 places in all of Tamil Nadu,
witnessed a turn around of 5000 fans in Chennai alone. Apart from the fans, leaders from some political parties also showed their support and visited the location in Chennai, near Chepauk Stadium.The fast started at 8.00 a.m. with the initiation ceremony performed by Vijay's father S.A. Chandrasekhar. While addressing the gathering, he mentioned that it was an attempt to show solidarity towards the genocide in Sri Lanka and that people from all sections of the society were participating in the fast to support the cause. Vijay joined the gathering later on and sat through the day. An emotional Vijay noted that he had no words to express gratitude to his fans for organizing the fast. The fast ended at 4.00 p.m. with Vijay's mother, Shoba Chandrasekhar, distributing juice. Apart from Vijay's family, including his wife Sangeetha, director Perarasu and actor Mansoor Ali Khan were also seen on the stage.



click here for more images gallery of Vijay fans in support of Sri Lankan Tamils
பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுடன் விஜய் மாபெரும் உண்ணாவிரதம்
16/11/2008

இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் - உண்ணாவிரத மேடையில் நடிகர் விஜய்
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். 37 இடங்களில் உண்ணாவிரதம் நடப்பதாக தகவல் வந்துள்ளது.
ரசிகர் மன்ற நற் பணி இயக்கத்தினரே இப் போராட்டத்தை நடத்துகின்றனர். இப்படிப்பட்ட ரசிகர்கள் எனக்கு இருப்பதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கனவே இலங்கையில் தமிழர் படு கொலையை கண்டித்து பல போராட்டங்கள் நடந்துள்ளன. நானும் அவற்றில் பங்கேற்றுள்ளேன். எனது ரசிகர்கள் நடத்துவதால் இந்த உண்ணாவிரதத்திலும் பங்கேற்று இருக்கிறேன். இலங்கையில் நடக்கும் போரினால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். அங்கு போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும். தமிழர்கள் படுகொலை செய் யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இதற்காக நாம் இலங்கை சென்று அங்குள்ள இராணுவத்தோடு போர்செய்ய முடியாது. இது போன்ற போராட்டங்கள் மூலம் நம் உணர்வுகளைத் தான் காட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்
சேல்த்தில் விஜய், மற்றும் 8000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் உண்ணாவிரதப் போராட்டம்.
தமிழகம் முழுதும் நடிகர் விஜய் நற்பணி மன்றத்தினர் ஈழத் தமிழர் மீதான இலங்கை அரசின் படுகொலைகளை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தனர்.சென்னையில் விஜய் இருக்க மற்ற மாவட்டங்களில் அவரது ரசிகர்கள் இருந்தனர். சேலத்தில் சேலம் விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் பார்த்திபன் தலைமையில் கிட்டத்தட்ட 8000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்க எழிச்சியோடு நடந்தது.
தமிழக வேளாண்மை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் புதல்வன் சட்டமன்ற உறுப்பினர் ஆ.ராஜா உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். அவர் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பேச அடுத்து வந்து இருந்த பல்வேறு தமிழ் அமைப்புகள் ஈழ்ம் பற்றி பேசினர். புதியன பண்பாட்டு இயக்கத்தின் செந்தில்," ஒரு சிற்று எறும்பை குட தொடர்ந்து அடித்தால் அது கொடுக்கை நிமிர்த்தி திருப்பி தாக்க முற்படும்,ஒரு புழுவை தாக்கினால் குட அது பொறுக்காமல் தன் எதிர்ப்பை காட்டும் அப்படி இருக்க வீரம் செறிந்த தமிழர் இனத்தை பாசிச வெறியோடு சிங்கள அரசு தாக்கும் போது தவிர்க்க இயலாமல் தமிழர்கள் திருப்பி தாக்குகின்றனர். இது வீரம் செறிந்த தமிழ் ஈழத்தின் விடுதலை போராட்டம்.தன் இலக்கை அடையாமல் நிறுத்தாது" என்றார் எழிச்சியோடு
இறுதியாக பேசிய மன்ற தலைவர் பார்த்திபன்," இந்தியாவில் பிறந்ததால் வெட்டியாக என் உயிர் போகும் என வருத்தபடுகிறேன். அங்கு என் ஈழத்தில் பிறந்து இருந்தால் என் மக்களுக்காக குண்டு பட்டு என் உயிர் துறந்து இருப்பேன்" என்றார் உணர்ச்சி பொங்க! குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழக இளைஞர் முன்னணி, மற்றும் பல அமைப்பினர் பங்கேற்க மிக இறப்பாக உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிந்தது. சினிமா ரசிகர்களாக இருந்த இளைஞர்கள் நடிகர் விஜயின் ஊக்கதால் ஈழ தமிழர்களுக்காக உன்ன விரதம் இருந்து தொப்புள் கொடி உறவுகளுக்கு ஆதரவு தந்து தமிழர்களாக உயர்ந்







சேல்த்தில் விஜய், மற்றும் 8000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் உண்ணாவிரதப் போராட்டம்.



இலங்கை பிரச்சனையை சின்ன வயது முதல் நானும் அறிந்து இருக்கிறேன்
நீங்களும் அறிந்து இருப்பீர்கள். கடந்த இரண்டு மாதங்களாக பத்திரிகைகளிலும், டிவியிலும் வருகிற தகவல்களை பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. நம் ஊரில் விமானம் பறந்து போவதை பார்த்து சிறுவர், சிறுமிகள் உற்சாகத்துடன் கை தட்டுவார்கள். ஆனால் இலங்கையில் ஒரு விமானம் பறந்தாலோ, சிறுவர் சிறுமிகள் எல்லாரும் பயந்து பதுங்கு குழியில் போய் ஒளிந்து கொள்கிறார்கள். நம் வீட்டில் கல் விழுந்தால், கல் வீசியது யார்? என்று அதட்டி கேட்கிறோம். அங்கே வீடுகள் மீது குண்டு விழுகிறது. நம்மால் தட்டிக் கேட்க முடியவில்லை. இலங்கை தமிழர்கள் மூன்று வேளை நிம்மதியாக சாப்பிட வேண்டும். நிம்மதியாக உறங்க வேண்டும்.
இவ்வாறு பேசிய விஜய், நான்கு மணிக்கு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்
click here for more images gallery of Vijay fans in support of Sri Lankan Tamils

இவ்வாறு பேசிய விஜய், நான்கு மணிக்கு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்

வியாழன், 13 நவம்பர், 2008
நவ 16ல் விஜய்-ரசிகர்கள் உண்ணாவிரதம்!

இலங்கை தமிழர் தாக்கப்படுவதை கண்டித்து ஒரு தமிழன் என்ற முறையில் என் உணர்வைக் காட்ட வேண்டிய நேரம் இது.
எனவே திட்டமிட்டபடி சென்னையில் நாளை மறுநாள், ஞாயிற்றுக்கிழமை, நானும் என் ரசிகர்களும் உண்ணாவிரதம் இருக்கிறோம் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.நெல்லையில் வில்லு படப்பிடிப்பில் நிருபர்கதளிடம் விஜய் கூறியதாவது:
இலங்கையில் கொல்லப்படும் நம் தமிழ்ச் சகோதர சகோதரிகள் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் அங்கு பூரண சுதந்திரத்துடன் வாழ வகை செய்யப்பட வேண்டும். போர் நிறுத்தம் இப்போதே முடிவுக்கு வர வேண்டும். இந்த நோக்கங்களுக்காகத்தான் சென்னையில் திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் பங்கேற்றேன்.அதற்காக பிரதமருக்கு தந்தி அனுப்புமாறு எனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். அதை ஏற்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பாரத பிரதமருக்கு தந்தி அனுப்பியதற்கு நன்றி.இலங்கையில் தமிழ் மக்கள் தங்களின் சொந்த இடத்தை விட்டு விட்டு உயிரைக் காப்பாற்ற காடுகளுக்குள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். இலங்கை தமிழ்ச் சகோதர, சகோதரிகளின் படுகொலையை கண்டித்து தமிழ் உணர்வை காட்ட வேண்டிய கட்டாயம், நேரம் வந்துள்ளது என்பதை உணர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் என எனது நற்பணி மன்றத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
அதை ஏற்றுத்தான் வருகிற 16ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரதம் இருக்கிறோம் அதாவது காவிரிப் பிரச்சினைக்காக ரஜினி உண்ணாவிரதமிருந்த இடம். இதில் நான் கலந்து கொள்வேன்.
இதேபோல மாவட்ட தலை நகரங்களிலும், மற்ற நகரங்களிலும் நடக்கும் உண்ணாவிரதத்தில் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க வேண்டும். சட்டம்-ஒழுங்கிற்கு பங்கம் ஏற்படாமல் உண்ணாவிரதம் நடத்த வேண்டும்.நமது நோக்கம் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். அங்குள்ள தமிழர்கள் காக்கப்பட வேண்டும். எனவே உண்ணாவிரதத்தின் போது துயரத்தின் அடையாளமாக கறுப்புத் துணியுடன் மவுனமாகவும், அமைதியாகவும், அகிம்சை வழியில் உணர்வுகளை பதிவு செய்ய வேண்டும் என்றார் விஜய்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில்,என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகர்-ரசிகைகளே, நண்பர்களே, வணக்கம். நடிகர் சங்கம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது நான் கேட்டுக்கொண்டபடி, இந்திய பிரதமருக்கு பல்லாயிரக்கணக்கான தந்திகளை கொடுத்து எனக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு என் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.என் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் திரைப்படங்களின் ரசனையையும் தாண்டி சமூக அக்கறையோடு பல சமயங்களில் செயல்பட்டு இருக்கிறீர்கள். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோதும், கார்கில் போரில் ராணுவ வீரர்கள் பாதித்தபோதும், சுனாமியால் தமிழ் மக்கள் தவித்தபோதும் பெரிதும் உங்களை ஈடுபடுத்திக்கொண்டு பல உதவிகளை செய்து இருக்கிறோம்.அதைப்போலவே இப்போதும் இலங்கை தமிழ் சகோதர-சகோதரிகளின் படுகொலையை கண்டித்து, தமிழ் உணர்வை காட்ட வேண்டிய கட்டாயமும், நேரமும் வந்திருக்கிறது என்பதை உணர்ந்து, நம் நற்பணி இயக்கத்தின் சார்பில் ஒரு உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும் என்று அனைவரும் எனக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தீர்கள்.ஆகவே வரும் 16ம் தேதி நற்பணி இயக்கத்தினரோடு சென்னையில் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து ஈழ தமிழர்கள் மீது நமக்கு இருக்கும் பரிவையும், பாசத்தையும் வெளிக்காட்ட நான் முடிவு செய்திருக்கிறேன். காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை உண்ணாவிரதம் நடைபெறும்.
அதே நாளில் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலும், அத்தனை நகரங்களிலும் நீங்களும் உண்ணாவிரதம் இருந்து உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
Vijay and his fans protest

Vijay in pearl city
ரசிகர்கள் ரகளை-விஜய் படப்பிடிப்பு 2 முறை ரத்து
நேற்று மணப்பாடு சர்ச் ரோட்டில் படப்பிடிப்பு தொடங்கியது. இதனை அறிந்த ஏராளமான ரசிகர்களும், பொதுமக்களும், நடிகர் விஜயை பார்க்க அங்கு கூடினர். இதனால் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. இதையடுத்து படத்தின் இயக்குநர் பிரபுதேவா அந்த பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மணப்பாடு பாலத்தில் படப்பிடிப்பை நடத்தினார். அங்கும் ரசிகர்கள் திரண்டனர். இதனால் அங்கு நடந்து கொண்டிருந்த படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் மணப்பாட்டை அடுத்த பெரியதாழை பைபாஸ் ரோட்டில் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இதில் நடிகர் விஜய் கார் ஓட்டி கொண்டு வருவது போலவும், அவரை பின் தொடர்ந்து பல கார்கள் வருவது போலவும் படமாக்கப்பட்டது. இந்த பகுதியிலும் ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும் படப்பிடிப்பு குழுவினரும், ரசிகர்களிடம் படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் உங்களை சந்திப்பார் என தெரிவித்தனர். இருந்தும் ரசிகர்கள் விஜயை பார்க்க முண்டியடித்துக் கொண்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்து பேச முயன்றார். அப்போது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். மேலும் அவரை ரசிகர்கள் பின்னோக்கி தள்ளினர். இதையடுத்து பாதுகாப்பு நின்ற போலீசார் விஜய்யை பத்திரமாக மீட்டு காருக்கு அனுப்பி வைத்தனர்.
செவ்வாய், 11 நவம்பர், 2008
வில்லு படத்தில் பில்லா பாடல்

.jpg)
.jpg)
வடிவேலுவும், நயனதாராவும் இந்தப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனராம். விஜய், நயனதாரா ஜோடி போட்டு நடித்து வரும் படம் வில்லு. பிரபுதேவாவும், விஜய்யும், போக்கிரி படத்திற்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். விஜய் ரசிகர்களை பக்காவாக திருப்திப்படுத்தும் வகையில் அனைத்து அம்சங்களையம் சேர்த்து படத்தை படா பிரமாண்டமாக உருவாக்கி வருகிறார்கள். படத்தில் வடிவேலுவுக்கு செமத்தியான காமெடி கேரக்டர். அவருக்கு ஒரு பாடலையும் வைத்துள்ளனர். ஏற்கனவே போக்கிரி படத்தில் ஆசினுடன், சுட்டும் விழிச் சுடரே பாடலுக்கு அசத்தல் கெட்டப்பில் ஆட்டம் போட்டு கலக்கல் காமெடி செய்திருந்தார் வடிவேலு. படத்தின் டாப் கலக்கல்களில் இதுவும் ஒன்றாக அமைந்திருந்தது. அதே பாணியில் வில்லு படத்திலும் ஒரு ரீமிக்ஸ் பாடலை வைத்துள்ளனராம் வடிவேலுவுக்காக. பில்லா படத்தில் இடம் பெற்ற மை நேம் இஸ் பில்லா பாடலை ரீமிக்ஸ் செய்து, வடிவேலுவை இதில் ஆட விட்டுள்ளனராம். போக்கிரியில் நாயகி ஆசின் ஆடியது போல, இப்பாடலில் நயனதாரா வடிவேலுவுடன் ஆடியுள்ளாராம். படத்தின் ஹைலைட் அம்சமாக இந்தப் பாடல் இடம் பெறுமாம். பில்லா கெட்டப்பில் படு சூப்பரான காஸ்ட்யூமுடன் நயனதாராவுடன் ஆட்டம் போட்டுள்ளாராம் வடிவேலு. சமீபத்தில் இந்தப் பாடலை ஏவி.எம். ஸ்டுடியோவில் படமாக்கியபோது அங்கு இருந்த அனைவராலும் சிரிப்பை அடக்க முடியவி்ல்லையாம் - வடிவேலுவின் காமெடி கலாட்டாவைப் பார்த்து.
படம் சூப்பர் ஹிட் என்று இப்போதே தொடை தட்டி சொல்கிறது வில்லு பட யூனிட்.
சனி, 8 நவம்பர், 2008
Vijay fans protest

fan clubs of actor Vijay have seem to decide to conduct a similar exercise on November 16, 2008.The one-day fast and protest will be held near the Chepauk Guest House in Chennai on November 16th as per an official release. The fan club members earlier met the Chennai Police Commissioner Sekhar to submit a petition requesting for permission and as per latest news, police officials have given a go ahead.
இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து நடிகர் விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம்!

இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து நடிகர் விஜய் ரசிகர்கள் தனியாக சென்னையில் எதிர்வரும் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
Villu (bow) featuring Vijay and Nayanthara and directed by Prabhu Deva is shaping up very well. For Vijay fans it will be a boon to watch this star sway after a last pongal release “Kuruvi”. Song sequences were shot in Bangkok, Malaysia and Switzerland. With the best choreographer beside, hero Vijay who sparkles in every move is confident to set the screen on fire. Vijay fans are excited about Villu being their Pongal delight.Ilaya Thalapthi Guarantees that 2009 Pongal is “Villu Pongal and also Vijay’s Pongal”
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் பங்கேற்ற விஜய், 'இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு ஒரு கோடி தந்திகள் அனுப்ப வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். ஆனால் 30,000 பேர்தான் தந்திகள் அனுப்பியதாக பின்னர் திரைப்பட தொழிலாளர் உண்ணாவிரதத்தில் அவரே தெரிவித்தார். இந்நிலையில், இலங்கை தமிழருக்காக விஜய் ரசிகர் மன்றத்தினர் தனியாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 16ம் தேதி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் சேகரிடம் மனு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு போலீசாரும் அனுமதி வழங்கியுள்ளனர். விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தனியாகப் போராட்டம் அறிவித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈழத்தில் ஈழத்தமிழ்ர்கள் உடுக்க உடையுமின்றி உறங்க உறைவிடமுமின்றி அல்லல்ப்படும் ஈழத்தின் சொந்தங்களின் வேதனைகளை அறிந்து அவர்களின் கண்ணீரை துடைக்க ஒரு மாபெரும் எளிமையான மனிதனின் (விஜய்) ரசிகர்கள் கை கொடுப்பது ஈழத்தமிழர்களின் வரலாற்றில் அளியாத சுவடுகள்.
அப்பாவி தமிழர்களின் கண்ணீரை துடைக்க விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருப்பதுஎல்லோருடைய ரசிகர்களும் பெருமை படவேன்டிய விடயம். அன்பார்ந்த மதிப்புக்குரிய ரசிகர் பெருமக்களே நன்றி சொல்ல வார்ததைகளே இல்லயே தளைவா விஜய் ரசிகர்கள் இருக்கும் உன்னதாமான உணவுர்களின் உண்ணாவிரதம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் நன்றி நன்றி
அப்பாவி தமிழர்களின் கண்ணீரை துடைக்க விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருப்பதுஎல்லோருடைய ரசிகர்களும் பெருமை படவேன்டிய விடயம். அன்பார்ந்த மதிப்புக்குரிய ரசிகர் பெருமக்களே நன்றி சொல்ல வார்ததைகளே இல்லயே தளைவா விஜய் ரசிகர்கள் இருக்கும் உன்னதாமான உணவுர்களின் உண்ணாவிரதம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் நன்றி நன்றி
Villu Pongal and also Vijay’s Pongal”

வியாழன், 6 நவம்பர், 2008
ரசிகர்கள் அனுப்பிய 30 ஆயிரம் தந்தி,பெருமைப்படுகிறார் விஜய்

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்தி அனுப்புங்கள் என்று தனது ரசிகர்களை கேட்டுக் கொண்ட விஜய், ஃபெப்சி உண்ணாவிரத பந்தலில் இதுபற்றி விவரங்களை அப்டேட் செய்தார். இதுவரை விஜய் ரசிகர்கள் 30 ஆயிரம் தந்திகள் அனுப்பியிருக்கிறார்களாம் பிரதமருக்கு.
இன்னும் தொடர்ந்து அனுப்ப வேண்டும் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜய்.
ஞாயிறு, 2 நவம்பர், 2008
விஜய் ஈழத்தமிழர்களுக்காய் உனர்ச்சிகரமான உணர்வை காட்டுகிற உரை!


click here for more function video online
விஜய்: பேசும்போது,ஈழத்தமிழர்கள் அங்கு உடுக்க உடையுமின்றி உறங்க உறைவிடமும்மின்றி அங்கு கஷ்ட்டப்படுகிறவர்களுக்குத்தான் இந்த உண்ணாவிரதம் என்றார். இலங்கையில் உடனே போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி . அதையடுத்து அவர் குறிப்பிட்டது, என்னை நேசிக்கிக்கும் ஒவ்வொறு ரசிகர்களும் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்றார். இன்னும் 24 மணி நேரத்திற்குள் குறைந்தது ஒரு கோடி தந்தியாவது அவருக்கு போய் சேர வேண்டும் என்று கூறி தனது ஈழத்தமிழர்களின் உணர்வை வெளிப்படித்தினார்
குறிப்பு:
தென் இந்திய திரைப்படக்குலுவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வலியுறுத்தியதற்க்காக ஒவ்வொறு ஈழ்த்தமிழர்களும் பெருமைபடவேண்டியவர்களும் கடமைபடவேண்டியவர்களும்.
இனிமேலாவது தமிழீழம் பிறக்கட்டும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
click here for more function video online
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)