புதன், 3 பிப்ரவரி, 2010

சுறாவின் அறிமுகம், சுனாமியின் சுறாவளி விஜய்

கடலில் சுனாமி வருகிறது. வானை தொடுகிற அளவுக்கு அலைகளின் சீற்றம். ஊரே அஞ்சி ஓடிக் கொண்டிருக்க அந்த அலையில் படகை ஓட்டிக் கொண்டு ஸ்டைலாக அறிமுகம் ஆவாராம் விஜய். பின்னணியில் ஹோய்...ஹோய்... என்று பில்டப் கொடுப்பது தனி மேஜிக்!
படத்தின் மையக்கருவே சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு விஜய் எப்படி தன் முயற்சியால் வீடு கட்டி தருகிறார் என்பதுதானாம். இதற்காக புதிதாக கட்டப்பட்ட சுனாமி குடியிருப்புகளில் ஷ§ட்டிங் நடத்த தீர்மானித்திருக்கிறார்களாம்.
இது விஜயின் 50வது படம் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக எடுக்கிறார்கள் சுற குழுவினர்கள்.

சனி, 30 ஜனவரி, 2010

ஏப்ரலில் சுறா..!- சன் அறிவிப்பு

விஜய் நடிக்கும் சுறா திரைப்படத்தை வாங்கியிருப்பது உண்மைதான் என்றும், அந்தப் படம் கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் நடிக்கும் 50 வது படம் இது.

சங்கிலி முருகன் தயாரிப்பில், எஸ்பி ராஜ்குமார் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. முக்கிய வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.சோட்டா மும்பை எனும் மலையாளப் படத்தின் தழுவலான இந்தப் படத்தில் மீனவராக வருகிறாராம் விஜய்.


இதற்காக தமிழகம், பாண்டிச்சேரி பகுதி கடற்கரையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளனர். இன்னும் பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. இவை வெளிநாட்டில் படமாக்கப்படுமாம்.இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டதாக முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது சன் பிக்சர்ஸ்.


இதுகுறித்து கூறுகையில், சுறா திரைப்படத்தை சன் பிக்ஸர்ஸ் வெளியிடுகிறது என்றும், வரும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை ஸ்பெஷலாக இந்தப் படம் வெளியாகும் என்றுன் சன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


ஏற்கெனவே விஜய் நடித்த வேட்டைக்காரனையும் சன் வெளியிட்டது

சனி, 16 ஜனவரி, 2010

2009 சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு வாக்களியுங்கள்.


உங்கள் அபிமான சூப்பர் ஷ்டார் வழைப்பூ கடந்த வருட காதலர் தின சிறப்பாக ‘’விஜயும் தமிழ் சினிமா வரலாறும்’’ என்ற தலைப்புடன் சிறிய பெட்டகம் ஒன்றை வெளியிட்டிருந்தது அதை பார்வையிட இங்கே க்ளிக் செய்யவும்.http://superstarvijay.blogspot.com/2009/03/nine-sentiment-as-vijays-vettaikaran.html
அதே போல் இவ் வருட காதலர் தின சிறப்பாக கலைவிருதுகள் உங்கள் உள்ளங்களை தொட வருகிறது.

கடந்த வருடம் சூப்பர்ஷ்டார் வலைப்பூ இணையத்தளம் வழங்கும் சிறந்த தமிழ் சினிமா திரை கலைஞர்களுக்கான விருதுகள் அனைத்தும்
August முதலாம் திகதி வெளியானது, ஆனால் இம்முறை புது ஆண்டு பிறந்த சூட்டோடு சூடாக திரை கலைஞர்களுக்கான விருதுகளை வெளியிட வேண்டும் என்கின்ற வேண்டுகோளுக்கும், நிபந்தனைகளுக்கும் இனங்க இவ் வருடம் காதலர் தின சிறப்பாக 14,2,2010 அன்று வெளியாக இருக்கிறது
சென்ற வருட சூப்பர்ஷ்டார் வலைப்பூ வழங்கிய விருதுகளை பார்வையிட இங்கே க்ளிக் செய்யவும்.http://superstarvijay.blogspot.com/2009/08/2008.html
வருடம் தோறும் சூப்பர்ஷ்டார் வலைப்பூ இணையத்தளம் வழங்கும் சிறந்த தமிழ் சினிமா திரை கலைஞர்களுக்கான விருதுகளுக்கு வாக்களிப்பவர்கள் ரசிகர்களாகிய நீங்கள்.ஆகவே இந் முறையும் 2009ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் சினிமா திரை கலைஞர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு ரசிகர்களுக்கு உள்ளது , நீங்கள் தேர்வு செய்யும் கலைஞர்களும் இணையத்தள சினிமா விமர்சக விருது குழுவினர்களும் ஒன்றினந்து தேர்வு செய்யும் சிறந்த தமிழ் சினிமா திரை கலைஞர்களுக்கு வழங்கவிருக்கும் இந்த சூப்பர்ஷ்டார் விருதுகளுக்கு ஆதரவு அளிக்குமாறு இணையத்தள குழுவினர்கள் கேட்டுகொள்கிறார்கள்.நான்கு வாரமாக நடைபெற இருக்கின்ற வாக்களிப்பு, முதல் இரண்டு வாரங்கள் ரசிகர்களாகிய நீங்கள் தேர்ந்தெடுக்கும் சிறந்த கலைஞர்களை tamilsuperstarawards@gmail.com முகவரிக்கு பட்டியல் இட்டு அனுப்பி வைக்கவும்.பின் இரண்டு வாரங்களும் நீங்கள் e-mail மூலம் வாக்களித்த முதல் ஐந்து கலைஞர்களை தேர்வுசெய்து poll மூலமாக நேரடியாக வாக்களிக்கலாம். ரசிகர்களுக்கான இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்.நீங்கள் வாக்களிக்கவேன்டிய கலைஞர்கள்.
சிறந்த நடிகர்:
சிறந்த நடிகை:
சிறந்த புதுமுக நடிகர் (அறிமுகம்):
சிறந்த புதுமுக நடிகை:
சிறந்த இயக்குனர்:
சிறந்த பாடகர்:
சிறந்த பாடகி:
சிறந்த இசைமைப்பாளர்:
சிறந்த வில்லன்:
சிறந்த பாடலசிரியர்:
விசேட விருதுகள்:
பாரட்டுக்குரியவை:
நினைவுக்குரியவர்கள்:
சூப்பர் ஷ்டார் website குழுவினர்:

மாசி (பெப்ரபரி14/02/2010) அன்று 14ம் திகதி கலைவிருதுகள் அனைத்தும் வெளியிடப்படும்.
நன்றி

வியாழன், 14 ஜனவரி, 2010

இளைய தளபதி விஜய் அவர்களுக்கும்,அவரது ரசிகர் பெருமக்களுக்கும் இவ் இணையத்தளம் சார்பாக இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள்.


வெள்ளி, 1 ஜனவரி, 2010

இளைய தளபதி விஜய் அவர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் சூப்பர் ஷ்டார் விஜய் இணையத்தளத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2010

இளைய தளபதி விஜய் அவர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் சூப்பர் ஷ்டார் விஜய் இணையத்தளத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2010

இளைய தளபதி விஜய் அவர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் சூப்பர் ஷ்டார் விஜய் இணையத்தளத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2010

வியாழன், 31 டிசம்பர், 2009

2009வது வருடமும் விஜயும்




செவ்வாய், 29 டிசம்பர், 2009

வேட்டைக்காரன் திரை விமர்சனம்.


நடிகர் : விஜய்.

நடிகை : அனுஷ்கா

நடிப்பு: விஜய், அனுஷ்கா, சலீம் கவுஸ் மற்றும் பலர்

ஒளிப்பதிவு : கோபிநாத்

இசை : விஜய் ஆண்டனி

கதை,திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் : பாபு சிவன்.

விஜய் நடிப்பில், பாபு சிவன் இயக்கத்தில்,விஜய் ஆண்டனியின் இசையில், ஏ.வி. எமின், சன் நிறுவன வெளியீட்டில் வெளிவந்திருக்கும்,அமர்க்கள வெற்றி திரைப்படம் வேட்டைக்காரன்.
இது விஜயின் 49வது திரைப்படம்.
கில்லி, குருவியை இயக்கிய தரணியிடம் அசோஸியேட்டாக இருந்த பாபு சிவன் வேட்டைக்காரனின் இயக்குனர்.

வேட்டைக்காரன் கதை விமர்சனம்

தூத்துக்குடியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்து இளைஞர் விஜய். நேர்மையான என்கவுண்டர் போலீஸ் அதிகாரி தேவராஜ் பிடித்து போய் அவரைப்போல் போலீஸ் வேலையில் சேர ஆசைப்படுகிறார். சென்னை வந்து தேவராஜ் படித்த கல்லூரியிலேயே சேருகிறார். ஆட்டோ ஓட்டி படிப்பு பீஸ் கட்டுகிறார்.

தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்து ரவுடிகளை அழிக்கிறார். அவரது தூத்துக்குடி டூ சென்னை பயண நோக்கமும் படு வித்தியாசம்.

ரயில்வே ஸ்டேஷன் போன்ற சந்தடி மிகுந்த இடங்களில் தனியாளாக ரவுடிகளை என்கவுண்ட‌ரில் போட்டுத் தள்ளும் போலீஸ் அதிகா‌ரி தேவரா‌ஜ் (தெலுங்கு நடிகர் ஸ்ரீஹ‌ரி). இவரது ஆதர்ஷ ஃபேன் தூத்துக்குடியில் வசிக்கும் ரவி என்கிற போலீஸ் ரவி (விஜய்). சென்னை வரும் போலீஸ் ரவி தேவரா‌ஜ் போலவே ஆட்டோ ஓட்டி, அவர் படித்த கல்லூரியிலேயே படிக்கிறார். தேவரா‌ஜ் போலவே என் கவுண்டர் போலீஸாக வேண்டும் என்பது ரவியின் கனவு, லட்சியம்.

விஜய்யின் அறிமுகம்: முதியவர் ஒருவரை இடித்துவிட்டு செல்லும் போலீஸ் வண்டியை விஜய் துரத்துகிறார். முடியவில்லை. திரும்பிப் பார்த்தால் குதிரைக்கு லாடம் அடிக்கும் இடம். அங்கே சில குதிரைகள். அடுத்தகணம் வெள்ளை குதிரையில் தலையில் கௌபாய் தொப்பியுடன் ஸ்லோமோஷனில் வண்டியை துரத்துகிறார் விஜய். இப்படி பார்வையாளர்களே யூகித்து பு‌ரிந்து கொள்ள பல்வேறு காட்சிகளை புத்திசாலித்தனமாக வைத்திருக்கிறார்கள்.

கதாநாயகியின் அறிமுகத்தையும் சிறப்பாக குறிப்பிட வேண்டும். திருமணம் பற்றி பேச்சு வருகிறது. எனக்கான பெண் இனிமேலா பிறக்கப் போகிறாள்? அவ எப்போதோ பிறந்திருப்பாள் என்கிறார் விஜய். உடனே தலையை கோதியபடி அனுஷ்கா எ‌ண்ட்‌ரி. தியேட்ட‌ரில் விசில். வித்தியாசமான அற்புத காட்சி.

விஜய் அனுஷ்காவின் பாட்டியை கரெக்ட் செய்வதும், அவரது ஸ்கூட்டியை கண்டுபிடிப்பதுமான காமெடி காட்சிகளுக்கு குழந்தைகளும் பெ‌ரியவர்களும் சேர்ந்து சி‌ரிப்பதை குறிப்பிட்டாக வேண்டும். காமெடி சீன் என்றதும் தோளை குறுக்கி தலையை ஆட்டி என்னங்கண்ணா என்று விஜய் பேச்சையும், பாடி லாங்வேஜையும் மாற்றுவது சூப்பர்.

இனி ரவுடி கிராஸிங்குக்கு வருவோம. செல்லா (ரவிசங்கர்) என்ற ரவுடிக்கு அழகான பெண்களைப் பார்த்தால் எப்படியும் அவர்களுடன் படுத்துவிட வேண்டும் என்ற வியாதி. சம்பந்தப்பட்ட பெண்களின் அப்பாவோ, புருஷனோ... யாருடைய வண்டியையாவது டியூ கட்டவில்லை என்று தூக்கி வந்துவிடுவான். பிறகு வண்டி வேண்டும் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பெண்ணையோ, மனைவியையோ அவனுக்கு விருந்தாக அனுப்பி வைக்க வேண்டும்.
விஜய்யின் கல்லூ‌ரி தோழிக்கு குறி வைக்கிறான் செல்லா. அந்த‌த் தோழியின் தந்தைதான் விஜய்க்கு ஆட்டோ வாடகைக்கு விட்டிருப்பவர்.

செல்லா ஐசியூ-வில். போலீஸ் விஜய்யை அள்ளிக்கொண்டு போகிறது. காரணம், செல்லாவின் தந்தை வேதநாயகத்திடம் (சலீம் கவுஸ்) பஞ்சப்படி வாங்கி பிழைப்பவர் அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் கட்டப்பொம்மன் (சாயா‌ஜி ஷிண்டே). போலீஸ் ஸ்டேஷனில் விஜய்யை போட்டு துவைக்கிறார்கள். அவரோ கதவை உடைத்து வந்து கட்டப்பொம்மனை மிதிக்கிறார். சென்னை சிட்டி போலீஸ் மொத்தமும் வந்த பிறகே அவரை அடக்க முடிகிறது.

அடுத்து பிளாஷ்பேக். அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் தேவராஜை வேதநாயகமும் அவரது ஆட்களும் நடுவீதியில் அடித்துப் போட்டு பார்வையை பறிக்கிறார்கள். அவரது மனைவியையும், குழந்தையையும் வீட்டை‌ப் பூட்டி உயிரோடு எ‌ரிக்கிறார்கள். தேவரா‌ஜ் பற்றிய சின்னச் சின்ன செய்திகளையும் தேடிப் படிக்கும் விஜய் இது கேட்டு ஆடிப் போகிறார்.

கட்டுமான கம்பெனியை தரைமட்டமாக்குகிறார் இன்னும் என்னென்னமோ செய்கிறார். அத்துடன் இது எதுவும் தெ‌ரியாமல் ஜாலியாக குளித்துக் கொண்டிருக்கும் அவரது மகன் செல்லாவையும் கொலை செய்கிறார். ஒட்டுமொத்த சென்னை கார்ப்பரேஷன் நினைத்தாலும் செய்ய முடியாத ஒருநாள் சாதனைகள்.
சலீம் கவுஸ் மட்டும் சாதாரணமா? மகனுக்கு கொள்ளி வைத்த கையோடு அரசியல்வாதியிடம் பேரம் பேசி வேட்புமனு தாக்கல் செய்யாமல், இடைத்தேர்தலில் நிற்காமல் அடுத்த நாளே மந்தி‌ரியாவதற்கான ஏற்பாடை செய்து முடிக்கிறார்.
கிளைமாக்ஸ் அதிஅற்புதம். ஐநூறு பேர் அடித்துக் கொண்டிருக்கும் இடத்தில் சைரனைப் போடு, கார் கதவு திறந்தாச்சு என்ற விஜய்யின் டைர‌க்சனை கேட்டு கண் தெ‌ரியாத தேவரா‌ஜ் ச‌ரியாக வேதநாயகத்தை நெஞ்சில் சுட்டுக் கொல்கிறார். டைரக்டர் டச்.

பாடலுக்கான லீடையும் வித்தியாசமாகவே பிடித்திருக்கிறார் இயக்குனர். கட்டிப் போட்டிருக்கும் அனுஷ்காவை காப்பாற்றி துப்பாக்கி குண்டுகளுக்கு நடுவில் பாய்ந்தும், தாவியும் தப்பித்து உயிரை‌க் கையில் பிடித்து பைக்கை கிளப்பினால், நான் உங்கூட தனியா இருக்கணும் என்று அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் கேட்ட த்‌ரிஷா மாதி‌ரி பில்லினில் உட்கார்ந்து விஜய்யின் முதுகை பிறாண்டுகிறார் அனுஷ்கா. உடனே கலர் கலரான ட்ரெஸ்ஸில் டூயட். ஒரு பைட் ஒரு பாட்டு... அமர்க்கள திரைக்கதை.

பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக அனுஷ்காவின் உடைக்கு. தாவணியை தாண்டி பார்க்காதே என்று அனுஷ்கா பாடும் போது அவர் தாவணி போட்டிருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. ‌ஜிகினா வைத்த பிரா, சின்னதே சின்னதாக ஒரு கர்ச்சீஃப். விஜய்யின் அசைவுகளில் ரசிக்கக் கூடிய அதே துள்ளல்.

தான் நேசித்த போலீஸ் வேலை கிடைத்தும், அதை மறுத்து, ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஒரு போலீஸ்காரன் இருக்கிறான் என விஜய் டச்சிங்காக பேசுகிறார், இத்துடன் வேட்டை முடிகிறது.

குறிப்பிடதக்கது (+++++)

விஜய் அதிகம் அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதும், அதில் சந்தர்ப்பத்தை சாதகமாக்கியும் நடிப்பதிலும் விஜயின் பரந்த மனமே இந்த வேட்டைக்கு காரனம்.

விஜய் நடித்த பல திரைப்படங்கள் வித்தியாசமான வெற்றியை கொடுத்திருந்தாலும்,இது ரசிகர்களின் விருந்தாக மட்டுமில்லை, வெற்றியின் மைகல்லாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

வழக்கம் போல், குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை சென்றடையக்கூடிய வகையில்,காமெடி, அடிதடி,கதை,காதல் அலுப்பு தட்டாத நடன அம்சம் என்று தனது தனி நடிப்பினால் வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ளார்.

கருத்து கூறும் பாடல் காட்சிகளுக்கு அந்த முறையிலே நடனம் ஆடி வசப்படுத்தியிருக்கிறார் என்றால் மிகையாகது.

வெற்றி படங்களின் வரிசையில் வேட்டைக்கரன் மட்டுமில்லை, வெற்றி இயக்குனர்கள் வரிசையில் இனைந்து இருப்பவர் பாபுசிவன்.

சன் பிக்சர்ஷ் இதுவரை காதலில் விழுந்தேன் தொடங்கி கன்டேன் காதலை வரைக்கும் வெளியிட்டு வசூலில் சதனை படைத்த சன், இதுவே முதல் முறையாக பெரிய நடிகரின் திரைபடத்தை வெளியிட்டு வசூலில் புதிய சாதனை படைத்திருக்கிறது.

குறிப்பிடதக்கது (---)

வித்தியாசமான திரைப்பட கதையை சொல்லிய விதம் சுறு சுறுப்பாகவும்,விறு விறுப்பகவும் அமைந்தாலும், வழக்கம் போல் கதையை ரவுடிகளுடன் இனைத்து வேடிக்கை பார்த்திருக்கிறார் இயக்குனர் பாபு சிவன், இதானல் கதை வெளிப்படையாக தென்படுவது மிக கடினம்.

வேட்டைக்காரன் நாயகி அனுஷ்க்காவுக்கு இதில் முக்கிய இடம் கொடுப்பதில் கஷ்ட்டபட்டிருக்கிறார் இயக்குனர்.

88.5/100
சூப்பர் ஷ்டார் நிர்வாக குழுவினர்