புதன், 24 மார்ச், 2010

மார்ச் 26-ல் சுறா இசை வெளியீடு!


விஜய்யின் 50 வது படம் சுறா இசை வெளியீடு வரும் மார்ச் 26-ம் தேதி நடக்கிறது.

மிகச் சரியாக திட்டமிடப்பட்டு, விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது சங்கிலி முருகனின் தயாரிப்பான சுறா. விஜய்யுடன் இவர் இணைவது இரண்டாவது முறை. முதல் படம் காதலுத்து மரியாதை.

இந்தப் படம் விஜய்யின் திரையுலக வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையும் என்கிறார் சங்கிலிமுருகன்.

இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது. விஜய் - தமன்னா பாடல் காட்சியை நியூஸிலாந்தில் படமாக்கி வருகிறார் இயக்குநர் எஸ்பி ராஜ்குமார். இன்னும் ஒரு வாரத்தில் சென்னை திரும்புகிறது படப்பிடிப்புக் குழு. அடுத்த நாளே இசை வெளியீட்டு விழாவுக்கு தேதி குறித்துள்ளனர்.

இதற்கிடையே படத்தின் ஆடியோ ரிலீஸூக்கு இப்போதே தேதி குறித்துவிட்டனர்.

மார்ச் 26-ம் தேதி சத்யம் வளாகத்தில் சுறா ஆடியோ ரிலீஸ் நடக்கிறது.

வெள்ளி, 19 மார்ச், 2010

ஏப்ரல் 14ந் தேதி விஜயின் 50வது படம் திரைக்கு சூறாவளியாக சுறா! ஆடியோ இம் மாதம் 26ந் தேதி வெளியாகிறது.






மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த சுறா, நாலு காய் பாய்ச்சலில் முன்பாகவே வரப்போகிறது. இப்படத்தை ஏப்ரல் 14 ந் தேதி ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது சன்.
சுறா விஜயின் 50வது படம் என்பது ஏதிர்பார்ப்பு புயலை விட எகிறுகிறது, தமிழ் நாட்டு குட்டி சூப்பர் ஷ்டார் என்று அன்புடன் அழைக்கும் தமிழர்களின் குடும்பத்தின் ஒருவராக கருதப்படும், பக்கத்து வீட்டு பைய்யனாகவே தோற்றம் அளிக்கும் இளையதளபதி விஜயின் 50 வது படம் பிரமான்ட தாயாரிப்பிலும், எதிர்பார்ப்பிலும் விரைவில் வெளிவருகிறது.

விஜயின் 49வது படத்தை வெளியிட்ட சன் பிக்சர்ச் விஜயின் 50வது படத்தையும் வெளியிடுகிறது
எஸ்.பி.ராஜ்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு எம்.எம்.பிரபு

சுறா மீனைக் குறிக்கும் இந்த படத்தில் விஜய் மீனவராக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா
படத்தின் கதையும் கருவும், கடலும் கடல் சாந்தவைகளுமாக இருப்பதால் சூட்டிங்கை பெரும்பாலும் கடலோர பகுதிகளில் நடத்தியுள்ளார் டைரக்டர் ராஜ்குமார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் படமாகி உள்ளன. பாடல் காட்சிகள் மட்டும் தமிழ்சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட்படி வெளிநாட்டில் எடுத்துள்ளனர்

இதே வேளை 'திருப்பாச்சியில்' இடம்பெற்ற 'கும்பிட போன தெய்வம்...' பாடலைப்போல் ஒரு பாடலை மணிசர்மா இசையில் எடுத்திருக்கிறார்கள். இதற்காக புதுச்சேரி அருகே நாற்பது லட்சம் ரூபாய் செலவில் செட் அமைத்து மூன்று மும்பை அழகிகளுடன் விஜய் ஒரு சுப்பர் குத்து ஆடியிருக்கிறார்.


ஏற்ற தாழ்வுகளால் விஜய் படங்களுக்கு முன்பில்லாத மவுசு கிடைத்திருக்கின்றது. வடிவேல், இணைந்திருப்பதால் சுறா பட எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நகைச்சுவை கலந்த குடும்ப படங்களை தருவதில் எஸ்.பி. ராஜ்குமார் சிறந்தவர். நம்பிக்கை தரும் கூட்டணி அதிகரிப்பதால் வெற்றியும் உறுதிப்படுத்தப்படுகிறது.


சுறாவின் ஆடியோ வெளியீடு 26 மார்ச்


மணிசர்மா இசையில் வெளியாகும் சுறா திரைப்பட பாடல்கள் இம்மாதம் 26ந் தேதி மனதை சூறடிக்க வெளிவருகிறது.

விஜய் நாளையதீர்ப்பு முதல் இன்றைய சுறா வரையும்?

விஜயின் 50வது பிரமான்ட தயாரிப்பில் ஏப்ரல் 14ந் தேதி வெளியீட்டை முன்னிட்டு உங்கள் அபிமானம் பெற்ற வழைப்பூவில் விஜயின் அந்தமும் அகரமும், நாளைய தீர்ப்பு முதல் சுறா வரை என்ற மேல் பார்வையாக ஏப்ரல் 14ந் தேதி இவ் வழைப்பூவில் வெளியாகிறது.
ஆகவே உங்களின் பங்களிப்பையும் செய்யவும், விஜய் இது வரை நடித்த திரைப்படங்களில் உங்களுக்கு பிடித்தது, வெறுத்தது, விஜயின் சினிமா விமர்சனங்கள், வாழ்த்துக்கள், கருத்துக்கள் எதுவாயினும் இந்த superstarvijayfanz@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு விரைவாக அனுப்பிவைக்கவும்.

வெள்ளி, 12 மார்ச், 2010

'3 இடியட்ஸ்' - படத்தில் விஜய், அஜீத் மற்றும் விக்ரம் நடிக்க வேண்டும்! மாதவன் கோரிக்கை


இந்தியில் ஆமிர்கான், மாதவன் நடிப்பில் ஹிட்டான படம் ‘3 இடியட்ஸ்’. இதன் ரீமேக் உரிமை வாங்க பலத்த போட்டி நிலவி வந்த நிலையில். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜெமினி பிலிம் சர்க்கியூட் ‘3 இடியட்ஸ்’ படத்தின் தமிழ் உரிமையை வாங்கியுள்ளது. ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இப்படத்தை இயக்கபோவதாக செய்திகள் அடிப்பட்டு வருகின்றன. முன்னதாக ‘3 இடியட்ஸ்’ படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார் என்று தகவல். கோலிவுட்டில் பரவி வந்தன.

இந்நிலையில் ‘3 இடியட்ஸ்’(இந்தி) படத்தில் நடித்த மாதவன் ‘3 இடியட்ஸ்’ தமிழ் ரீமேக்கில் விஜய், அஜீத் மற்றும் விக்ரம் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளார். நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு வந்த மாதவன், ‘3 இடியட்ஸ்’ தமிழில் ரீமேக் ஆவது சந்தோஷமாக உள்ளது என்றும் விக்ரம், அஜீத் மற்றும் விஜய் நடித்தால் கண்டிப்பாக பாலிவுட்டை விட கோலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் மாதவன் கூறினார்.

புதன், 10 மார்ச், 2010

ஊட்டியில விஜய் தமன்னாவோட டூயட்!


சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘சுறா’ படத்தின் ஷூட்டிங் ஹை ஸ்பீடில் பறந்துக்கொண்டிருக்கிறது. இது விஜய்யின் 50வது படம் என்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

‘சுறா’வுக்காக ஊட்டியில தமன்னாவோட டூயட் பாடிக்கிட்டிருக்க விஜய், அதை முடிச்சுட்டு ராமநாதபுரம் போய் அங்கேயும் ஒரு டூயட் பாடிட்டு வரப்போறார். முன்னதில சிவசங்கரும், பின்னதில ராஜுசுந்தரமும் மாஸ்டர்கள். ஆடி அசத்துங்க..!

வெள்ளி, 5 மார்ச், 2010

சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘சுறா’ விஜய்யின் 50வது படம், இயக்குநர் எஸ்.பி.ராஜகுமார் என்ன சொல்கிறார் ?










சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘சுறா’ படத்தின் ஷூட்டிங் ஹை ஸ்பீடில் பறந்துக்கொண்டிருக்கிறது. இது விஜய்யின் 50வது படம் என்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.


என்ன சொல்கிறார் படத்தின் இயக்குநர் எஸ்.பி.ராஜகுமார்?

‘‘வழக்கமான விஜய் படத்தோட பத்து மடங்கு பரபரன்னு போகிற திரைக்கதைதான் படத்துக்கு பலம். ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட், காதல்னு கலக்கலான விஷயங்கள் படத்துல நிறைய இருக்கு. அடுத்த காட்சி இப்படித்தான் இருக்கும். இதுதான் கிளைமாக்ஸ்னு யாரும் யூகிக்க முடியாதபடி விர்ர்ர்ர்ருனு போகும். இதை நான் அதிகப்படியா சொல்றேன்னு நினைக்காதீங்க. இதுதான் நிஜம்!’’

‘சுறா’ என்ன கதை?

விஜய் மீனவர். தன்னோட தனிப்பட்ட நலன்களை மட்டுமே நினைக்காம அடித்தட்டு மக்களுக்கான உரிமைகளையும் போராடி வாங்கி தர்றார்... இப்படி கதையை சொன்னா, உங்களுக்கு ஏதோ தத்துவமா, கருத்து சொல்ற மாதிரி தோμம். ஆனா, அப்படி இல்லாம, பக்கா கமர்ஷியல் லைன்ல சுர்ர்ர்ருனு படம் பண்ணிட்டிருக்கோம்.

தமன்னா?

தமன்னா, இப்ப இருக்கிற டாப் ஹீரோயின். எப்பவும் சரியான நேரத்தை கடைப்பிடிக்கிற ஆர்டிஸ்ட். நடிப்புல பின்னியிருக்காங்க. படத்துல அவங்க குறும்புக்கார கல்லூரி மாணவி. பெரும் பணக்காரரின் மகள். ரொம்ப ஸ்டைலான கேரக்டர். அவங்க வர்ற சீனெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கிற மாதிரி இருக்கும். வடிவேலு காமெடி படத்துல மிரட்டும்.


விஜய் படத்துல பாடல்கள் ரசனையா இருக்குமே?

இந்தப் படத்துலயும்தான். மணிசர்மா இசைல எல்லா பாடலுமே ஹிட்டாகும். வெரைட்டியா ட்யூன் போட்டிருக்கார். ‘வெற்றிக்கொடி ஏத்து / வீசும் நம்ம காத்து’னு ஆரம்பிக்கிற பாட்டு சும்மா கலர்ஃபுல்லா கலக்கலா இருக்கும். ‘வங்க கடல் எல்லை / நான் சிங்கம் பெத்த பிள்ளை’பரபரப்பான பாடலா விசிலடிச்சு துள்ளிக் குதிக்கும்படியா
இருக்கும்.

ஆக்ஷன் காட்சிகள் எப்படி?

கனல் கண்ணன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைச்சிருக்கார். இதுவரை வராத அளவு வித்தியாசமான ஆக்ஷன் காட்சிகளா இருக்கும். விஜய் அதிகப்படியா ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சிகள்ல நடிச்சிருக்கார். பொதுவாவே எல்லா விஷயத்துக்கும் அவர் ரிஸ்க் எடுக்க தயங்காதவர். உதாரணத்துக்கு, கடல்லயிருந்து அரை மைல் தூரத்துக்கு நீச்சலடிச்சு கரைக்கு வரμம். நாங்க நீச்சல் தெரிஞ்ச சிலரை கரையில உட்கார வச்சிருந்தோம். ஆனா, விஜய் நானே பண்றேன்னார். அதே போல நீந்தியும் வந்தார். இது பெரிய ரிஸ்க். ஆத்துல நீச்சலடிக்கற மாதிரி இல்ல, கடல்ல நீச்சலடிக்கிறது. இது எவ்வளவு கஷ்டம்னு அனுபவப்பட்டவங்களுக்கு தெரியும்.

புது வில்லனை அறிமுகபடுத்துறீங்களாமே?

தேவ் கில் புது வில்லன் இல்ல. தமிழுக்கு புதுசு. தெலுங்கு ‘மகதீரா’ படத்துல மிரட்டலா நடிச்சிருப்பாரு. அந்தப் படத்துக்கு பிறகு அங்க அவருக்கு நிறைய வாய்ப்புகள். ஆனா, அந்தப் படங்கள்ல நடிக்காம, ‘சுறா’வுக்காக வந்தார். அவரோட கேரக்டர் என்னன்னு இப்பவே சொன்னா சஸ்பென்ஸ் போயிடும். அதனால பட ரிலீஸ் வரை அவர் பற்றி வேண்டாம்.

பஞ்ச் டயலாக்?

அது இல்லாம எப்படி? படத்துல விஜய், சூடாகிற காட்சிகள்ல எல்லாம் பஞ்ச் டயலாக் இருக்கும். சாம்பிளுக்கு ஒண்μ: ‘உனக்கு கோவம் வந்தா அடி விழும். எனக்கு கோவம் வந்தா இடி விழும்!

புதன், 3 மார்ச், 2010

விஜய்யின் 51வது படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் தயா‌ரிக்கிறது, ஜெயம் ராஜா இயக்குகிறார்



விஜய் தனது 50வது படமான சுறாவில் நடித்து வருகிறார். அடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிக்கிறார்? சித்திக் அல்லது ஜெயம் ராஜா?

விஜய்யை நான் இயக்குவது முடிவு செய்யப்பட்ட விஷயம். அது அவரது 51வது படமா இல்லை 52வது படமா என்பதெல்லாம் எனக்கு‌த் தெ‌ரியாது என்று கூறியிருந்தார் ஜெயம் ராஜா. சித்திக் தனது பாடிகார்ட் படத்தை விஜய்யை வைத்து ‌‌ரீமேக் செய்ய அவசரம் காட்டுவதால் எழுந்த குழப்பம் இது.

இந்நிலையில் விஜய்யின் 51வது படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் தயா‌ரிக்கிறது, ஜெயம் ராஜா இயக்குகிறார் என ஆஸ்கர் பிலிம்ஸ் தரப்பில் அதிகார‌ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் விஜய்யின் 51வது படம் உறுதியாகியுள்ளது.

சூறாவளி சுறாவின் புதிய போஷ்டர்கள்