
இந்த நேரத்தில், தனது மன்றத்துக்கும் ஒரு கொடியை உருவாக்கி, அதை அறிமுகம் செய்கிற விழாவையும் சென்னையில் நடத்த தீர்மானித்திருக்கிறார் விஜய். இவரது பிறந்த நாள் விழாவும் கொடி அறிமுக விழாவும் ஒரே தேதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உழைத்திடு, உயர்ந்திடு, உன்னால் முடியும் என்ற வாசங்களோடு உருவாக்கப்பட்டிருக்கும் அந்த கொடியில் விஜயின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. நீலம் வெள்ளை கலரில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த கொடி.
விஜய்க்கு தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மன்றங்கள் இருக்கிறதாம். ஒவ்வொரு மன்றத்திலும் குறைந்தது 25 பேர் இருக்கிறார்கள். இவர்கள் பற்றிய விபரங்களை கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்திருக்கிறது தலைமை மன்றம். இப்படியெல்லாம் முறையாக செயல்படும் இவர்களின் எதிர்கால நோக்கம் என்னவாக இருக்கும்?
கேள்விக்கு விளக்கம் சொல்கிறார் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி. இன்று சேவை மனப்பான்மையுடன் செயல்படும் இளைஞர்கள் நாளை ஒரு அமைப்பாக உருவாகி, அரசியலுக்கு வந்து சமூக அந்தஸ்தை பெற நினைத்தால் அதுவும் இயற்கையான வளர்ச்சியாக இருக்கும்! இந்த பதிலில் மேலோட்டமாக கூட அல்ல, தெளிவாகவே புரிகிறது உண்மை! இனியென்ன... வட்டம், மாவட்டம் என்ற நினைப்போடு நடைபோட வேண்டியதுதானே விஜய் ரசிகர்களே...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
talk me